சென்னை: மாவீரர் தீரன் சின்னமலையின் தியாகத்தைப் போற்றுவோம் என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: ஆங்கிலேயர்களுக்கு எதிரான பல போர்களில் வெற்றி பெற்ற தீரன் சின்னமலை அவர்களை எளிதில் வெல்ல முடியாது என முடிவு செய்த ஆங்கிலேயப் படையினர் சூழ்ச்சியால் அவரை கைது செய்து, சங்ககிரி கோட்டைக்கு அழைத்துச் சென்று அவரை தூக்கிலிட்டனர். மாவீரர் தீரன் சின்னமலை அவர்கள் தன் வாழ்நாளின் பெரும்பகுதியை ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக செலவிட்டு இந்திய நாட்டின் சுதந்திரத்திற்காக தன் உயிரை அர்ப்பணித்தாலும், அவர் திருக்கோயில்களுக்கு செய்த திருப்பணிகளும், அவர் அளித்த கொடைகளும், தர்மங்களும் ஏராளம். மாவீரர் தீரன் சின்னமலை அவர்களின் பெருமைமிக்க அடிச்சுவட்டில் நாமும் பயணித்து நாட்டுப் பற்றுடன் வாழ்வோம் என அவரது நினைவு நாளில் நாம் உறுதி ஏற்போம். மாவீரர் தீரன் சின்னமலையின் தியாகத்தைப் போற்றுவோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது….
The post தீரன் சின்னமலையின் தியாகத்தை போற்றுவோம்; ஓபிஎஸ் appeared first on Dinakaran.