×

திருத்தணி முருகன் கோயிலில் 2ம் நாள் தெப்ப உற்சவம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

சென்னை: திருத்தணி முருகன் கோயிலில் ஆடி கிருத்திகை விழாவை முன்னிட்டு நேற்று 2ம் நாள் தெப்ப உற்சவம் நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். அறுபடை வீடுகளில் ஒன்றான திருத்தணி முருகன் கோயிலில் ஆடி கிருத்திகை, ஆடி பரணி விழா நடந்து வருகிறது. இதையொட்டி மூலவர் முருகர் மற்றும் மலைக்கோயில் காவடி மண்டபத்தில் எழுந்தருளி உள்ள முருகர் ஆகியோருக்கு தினமும் சிறப்பு பூஜைகள் நடக்கிறது. பால், தயிர், பன்னீர், இளநீர் மற்றும் விபூதி ஆகிய வாசனை திரவியங்கள் மூலமும் பலவகை பழங்கள் மூலமும் சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடத்தப்பட்டு வருகிறது. ஆடி கிருத்திகையை முன்னிட்டு நேற்று முன்தினம் மாலை முதல் நாள் தெப்ப உற்சவம், சரவண பொய்கை குளத்தில் நடந்தது. இதில் மலைக்கோயிலில் இருந்து படிக்கட்டு வழியாக முருகர், வள்ளி, தெய்வானையுடன் தெப்பத்துக்கு வந்தார். பின்னர் தெப்பத்தை 3 முறை வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். அப்போது தெப்பத்தை சுற்றி நின்ற பக்தர்கள், அரோகரா… அரோகரா.. என கோஷங்கள் எழுப்பினர்.நேற்று முன்தினம் ஆடி கிருத்திகை விழாவுக்கு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு குடும்பத்துடன் வந்து சாமி தரிசனம் செய்தார். பின்னர் பக்தர்களுக்கு செய்யப்பட்டுள்ள அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தார். பக்தர்களுக்கு அனைத்து வசதிகளும் தங்குதடையின்றி கிடைக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். இந்நிலையில், நேற்று மாலை 2ம் நாள் தெப்ப திருவிழா நடந்தது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். இன்று முருகர், வள்ளி, தெய்வானையுடன் தெப்பத்தில் 5 முறை வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்….

The post திருத்தணி முருகன் கோயிலில் 2ம் நாள் தெப்ப உற்சவம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் appeared first on Dinakaran.

Tags : Theppa Utsavam ,Tiruthani Murugan Temple ,Chennai ,Aadi Krittikai festival ,Thiruthani Murugan Temple ,Thirthani Murugan Temple ,Darshan ,
× RELATED திருத்தணி முருகன் கோயிலில் தரிசனம் செய்த 750 பக்தர்களுக்கு மஞ்சப்பை