×

கோயில் நிலம் அளவிடும் பணி தீவிரம்

கூடுவாஞ்சேரி: நந்திவரம்- கூடுவாஞ்சேரி நகராட்சியில் பழமை வாய்ந்த நந்தீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு நந்தீஸ்வரர் நகர், ஜெய் பீம் நகர், தாங்கல் பகுதி உட்பட பல்வேறு இடங்களில் பல கோடியில் ஏராளமான சொத்துக்கள் உள்ளன. இதில், ஜெய் பீம் நகர் மற்றும் நந்தீஸ்வரர் நகர் பகுதியில் 500 மேற்பட்டவர்கள் பல ஆண்டுகளாக வீடுகளை கட்டி வசித்து வருகின்றனர்.  இந்நிலையில், செங்கல்பட்டு மாவட்ட அறநிலையத்துறை உதவி இயக்குனர் ஆர்.சேகர், நந்தீஸ்வரர் கோயில் செயல் அலுவலர் கே.வெங்கடேசன், அறநிலையத்துறை வட்டாட்சியர் சுப்பிரமணி ஆகியோர் தலைமையில் நந்தீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான இடங்களை நேற்றுமுன்தினம் ஆய்வு செய்து அளவிடும் பணியில் ஈடுபட்டனர். இதில், சர்வேயர்கள் நித்தியானந்தம், ராமு, குணசேகர், திருக்கோயில் உதவியாளர் பார்த்திபன் ஆகியோர் கொண்ட குழுவினர் தொடங்கினர். அப்போது, எவ்வித பிரச்னையும் ஏற்படாமல் இருக்க போலீஸ் பாதுகாப்புடன் அளவிடும் பணி நடந்து வருகிறது….

The post கோயில் நிலம் அளவிடும் பணி தீவிரம் appeared first on Dinakaran.

Tags : Guduvanchery ,Nandivaram ,Nandeeswarar temple ,Guduvancheri ,Nandeswarar Nagar ,Jai Bhim ,
× RELATED காட்டூர்-அண்ணா நகர் சாலை ஓரத்தில்...