×

சென்னை கலெக்டர் அலுவலகத்தில் ஒலிம்பியாட் விளம்பர பலூன்: கலெக்டர் பறக்க விட்டார்

சென்னை: சென்னை கலெக்டர் அலுவலகத்தில் ஒலிம்பியாட் விளம்பர பலூனை கலெக்டர் அமிர்த ஜோதி பறக்க விட்டார். இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழ்நாட்டில் செங்கல்பட்டு மாவட்டம் மகாபலிபுரத்தில் உலக சதுரங்க போட்டி நடைபெறுகிறது. அதனை தொடர்ந்து தமிழகம் முழுவதும் ஒலிம்பியாட் போட்டியை விளம்பரப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் சென்னை மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒலிம்பியாட் போட்டியை விளம்பரப்படுத்தும் வகையில் ஒலிம்பியாட் விளம்பர பலூனை மாவட்ட கலெக்டர் சு.அமிர்த ஜோதி நேற்று பறக்க விட்டார். நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ஏ.ஆர்.ஏ.ஜெயராஜ், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது) பா.கியூரி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் ஆ.இளங்கோ மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்….

The post சென்னை கலெக்டர் அலுவலகத்தில் ஒலிம்பியாட் விளம்பர பலூன்: கலெக்டர் பறக்க விட்டார் appeared first on Dinakaran.

Tags : Olympiad ,Chennai ,Collector ,Amrita Jyoti ,Chennai Collector ,India ,
× RELATED சமுதாய வளர்ச்சிக்கு சிறப்பாக...