×

யாரையும் நான் திருமணம் செய்யவில்லை: சுஷ்மிதா சென் ஆவேசம்

மும்பை: நடிகை சுஷ்மிதா சென்னுக்கு 46 வயது ஆகிறது. ஆனால், இன்னும் அவர் திருமணம் செய்துகொள்ளவில்லை. இந்நிலையில், இந்திய கிரிக்கெட் வாரியத்தில் 470 கோடி ரூபாய் மோசடி செய்துவிட்டு, இந்தியாவில் இருந்து தப்பியோடி லண்டனில் வசித்து வரும் ஐபிஎல் முன்னாள் தலைவர் லலித் மோடி, சுஷ்மிதா சென்னுடன் டேட்டிங் செய்து வருவதாக தனது சமூக வலைத்தளத்தில் சில போட்டோக்களுடன் ஒரு பதிவு வெளியிட்டிருந்தார். அதில், ‘சுஷ்மிதா சென்னுடன் புதிய வாழ்க்கையை தொடங்கி இருக்கிறேன். நிலவில் இருப்பது போல் உணர்கிறேன்’ என்று குறிப்பிட்டிருந்தார். இது வைரலாகி கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளானது. 56 வயது லலித் மோடி, 46 வயது சுஷ்மிதா சென்னை காதலிப்பதா என்று கொதித்த நெட்டிசன்கள், அவர்களைப் பற்றி பல்வேறு மீம்ஸ்கள் வெளியிட்டு வருகின்றனர். இதற்கு விளக்கம் அளிக்கும் விதமாக சுஷ்மிதா சென் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார். அதில் தனது வளர்ப்பு மகள்களுடன் இருக்கும் போட்டோவை பதிவிட்டு, ‘மிகவும் மகிழ்ச்சியான ஒரு இடத்தில் நான் இருக்கிறேன். யாரையும் நான் திருமணம் செய்யவில்லை. திருமணத்தின் அடையாளமாக என் விரல்களில் எந்த மோதிரமும் இல்லை. என்னைச் சுற்றிலும் அளவற்ற அன்பு சூழ்ந்துள்ளது, அவ்வளவுதான். தற்போது மீண்டும் பழைய வாழ்க்கைக்கு திரும்பிவிட்டேன். இதை நான் தெளிவுபடுத்துகிறேன்’ என்று ஆவேசத்துடன் கூறியுள்ளார்….

The post யாரையும் நான் திருமணம் செய்யவில்லை: சுஷ்மிதா சென் ஆவேசம் appeared first on Dinakaran.

Tags : Sushmita Sen ,Mumbai ,
× RELATED மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 609 புள்ளிகள் சரிவு..!!