- ரேஷன் கடை அங்கன்வாடி மையம்
- சட்டமன்ற உறுப்பினர்
- 8 வது வார்டு
- காஞ்சிபுரம்
- புதிய ரஷங்கடா
- காஞ்சிபுரம் 8வது வார்டு
- புதிய ரேஷன் கடை அங்கன்வாடி மையம்
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாநகராட்சி 8வது வார்டில் காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.23.30 லட்சம் மதிப்பில் புதிய ரேஷன்கடை, அங்கன்வாடி மையத்தை எம்எல்ஏ எழிலரசன் நேற்று திறந்து வைத்தார். காஞ்சிபுரம் மாநகராட்சி 8 வது வார்டு பகுதியில் நியாய விலை கட்டிடம் மற்றும் அங்கன்வாடி மையம் கட்டித்தரக்கோரி காஞ்சிபுரம் தொகுதி எம்எல்ஏ எழிலரசனிடம் பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்திருந்தனர். பொதுமக்களின் கோரிக்கை ஏற்று காஞ்சிபுரம் மாநகராட்சி 8வது வார்டில் உள்ள கிழக்கு ராஜ வீதியில் காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ₹ 23.30 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட புதிய நியாய விலை கடை மற்றும் அங்கன்வாடி மைய கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து நேற்று காஞ்சி எம்எல்ஏ எழிலரசன் கட்டிடங்களை திறந்து வைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்க்கு அர்ப்பனித்தார். பின்னர், பொதுமக்கள் மற்றும் குழந்தைகளுக்கு இனிப்புகளை வழங்கினார். விழாவில், மாநகராட்சி ஆணையர் கண்ணன், மேயர் மகாலட்சுமியுவராஜ், நகர செயலாளர் ஆறுமுகம், மண்டலக்குழு தலைவர்கள் சாந்தி சீனிவாசன், செவிலிமேடு மோகன், சந்துரு, மாமன்ற உறுப்பினர்கள் சுரேஷ், கமலக்கண்ணன், பானுப்பிரியா சிலம்பரசன், இலக்கியா சுகுமார், நிர்மலா, கௌதமி திருமாதாசன், நிர்வாகிகள் யுவராஜ், வெங்கடேசன், நீலகண்டன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்….
The post காஞ்சிபுரம் 8வது வார்டில் ரூ.23 லட்சத்தில் புதிய ரேஷன் கடை அங்கன்வாடி மையம்: எம்எல்ஏ திறந்து வைத்தார் appeared first on Dinakaran.