×
Saravana Stores

நான் அழகா இல்லைன்னு ஃபீல் பண்ணினேன்: சாய் பல்லவி ஓபன் டாக்

சென்னை: தனது முகத் தோற்றம் குறித்து சாய் பல்லவி கூறியது: அம்மா எப்போதுமே நீ ரொம்ப அழகாக இருக்கனு சொல்லிட்டே இருப்பாங்க. காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு அப்படின்னு அவங்களை கிண்டல் பண்ணுவேன். அப்புறம் அதற்கு ஒரு ஆதாரம் தேடுவோம்ல. படிக்கிற காலத்துல, இரண்டு, மூன்று பசங்க சொன்னங்கன்னா பார்ப்போம்ன்னு யோசிப்பேன். ஆனால், எல்லோருமே என்னைப் பார்த்தால் பயப்படுவாங்க. ஏனென்றால், அப்பா ரொம்ப ஸ்ட்ரிக்ட். அதனால் என்கூட யாருமே பேசமாட்டாங்க. என் ஃப்ரெண்ட்ஸ்ங்க எல்லாம் இரண்டு, மூன்று பசங்க கூட பேசிட்டு இருப்பாங்க. அது ஒரு ஃபீல்.

சின்ன வயதில் முகப்பருவை பார்த்துட்டு பெரியவங்க வந்து ஏன் இப்படி இருக்கு அப்படின்னு சொல்லிட்டுப்போவாங்க. இதனால், நாம் அழகாக இல்லையோ அப்படின்னு ஃபீல் இருந்திருக்கு. நம்ம ஃபிரெண்ட்ஸ் கிட்ட எல்லாம், பசங்க அழகாக இருக்கன்னு சொல்லி, நம்மகிட்ட அவங்க சொல்லாத போதும் ஒரு ஃபீல் இருந்திருக்கு. பிறகு சினிமாவுக்கு வந்தேன். என்னுடைய முதல் படம் பண்ணிட்டு ஜார்ஜியா போன பிறகு, என்னுடைய போட்டோவை நிறைய பேர் டிஸ்பிளே பிக்சராக வைச்சிருந்தாங்க. நாம என்ன அழகவா இருக்கோம் நம்மளை டிஸ்பிளை பிக்சர் வைச்சிருக்காங்களேன்னு நினைச்சேன். ஆனால் இப்போது பசங்க கிட்டேயிருந்து நிறைய புரபோசல் வருது. இப்போதுதான் நான் அழகானவள்னு தோணுது.

Tags : Sai Pallavi ,CHENNAI ,
× RELATED மோசடி அழைப்பு என்று நினைத்து முதல் படத்தை நிராகரித்த சாய் பல்லவி