×

ஊட்டி தாவரவியல் பூங்கா நடைபாதையில் மீண்டும் கடை நடத்த அனுமதி கோரி வியாபாரிகள் போராட்டம்

ஊட்டி :  ஊட்டி தாவரவியல் பூங்கா சாலையில் ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த சாலைேயார கடைகளை நகராட்சி நிர்வாகம் அண்மையில் அகற்றிய நிலையில், மீண்டும் அதே பகுதியில் கடைகள் நடத்த அனுமதிக்க கோரி வியாபாரிகள் பூங்கா அருகே போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா அருகே கார்டன் சாலை நடைபாதை, மதுவான சாலை ஓரங்களில் சுமார் 100க்கும் மேற்பட்ட சிறு வியாபாரிகள் சாலையோர கடை வைத்து கேரட் ேபான்ற காய்கறிகள், வேர்கடலை, பூக்கள், விதைகள், சோளம் போன்றவற்றை சுற்றுலா பயணிகளுக்கு விற்பனை செய்து வந்தனர். பொம்மை, தொப்பி, குல்லா போன்றவற்றையும் விற்பனை செய்து அதன் மூலம் கிடைக்க கூடிய வருவாயில் பிழைப்பு நடத்தி வந்தனர். நிரந்த கடைகள் இல்லாத நிலையில், நடைபாதை மற்றும் சாலைேயாரங்களில் கடை வைத்தனர். இதற்கு நகராட்சி எவ்வித அனுமதியும் தரவில்லை என கூறப்படுகிறது. இவர்களுக்கு மத்திய அரசின் சாலையோர வியாபாரிகளுக்கான அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்நிலையில் இப்பகுதியில் நகராட்சி இடத்தை ஆக்கிரமிப்பு செய்து வைக்கப்பட்டிருந்த சாலைேயார கடைகளை நகராட்சி நிர்வாகம் கடந்த 8ம் தேதி அகற்றியது. இதற்கு வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.  இதற்கு நகராட்சி தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. அப்போது நகராட்சி நிர்வாகத்தினர் கூறுகையில், ‘ஊட்டி நகராட்சி நிர்வாகம் தரப்பில் தாவரவியல் பூங்கா முக்கிய பகுதியாக விளங்கும் நிலையில், இங்கு முக்கிய பிரமுகர்கள் அடிக்கடி வந்து செல்கின்றனர். இப்பகுதியில் உள்ள சாலையோர கடைகள் நகராட்சி இடத்தை ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ளன. சாலையோர வியாபாரிகள் நிரந்தரமாக கடை வைக்க அனுமதி கிடையாது. நாள்தோறும் விற்பனை பொருட்களை கொண்டு வந்து வைத்து விற்பனை செய்து விட்டு எடுத்து சென்று விட வேண்டும். ஆனால் இங்கு நிரந்தரமாக கடை வைத்துள்ளனர். இதனால் சுற்றுலா பயணிகள் அதிகம் வரும் சமயங்களில் போக்குவரத்து பாதிப்புகள் ஏற்படுகின்றன. இதனை கருத்தில் கொண்டு கடைகள் அகற்றப்பட்டது, ’ என தெரிவித்தனர். இந்த நிலையில் நேற்று காலை அப்பகுதியில் சர்வே பணிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்நிலையில் ஏற்கனவே நடத்தி வந்த இடத்தில் கடைகள் நடத்த அனுமதிக்க கோரி ஏராளமான வியாபாரிகள் மழையையும் பொருட்படுத்தாமல் தாவரவியல் பூங்கா நுழை வாயில் அருகே கூடி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பதற்றமான சூழல் ஏற்பட்ட நிலையில் ஊட்டி டவுன் டிஎஸ்பி., மகேஷ்வரன் தலைமையில் ஏராளமான போலீசார் அப்பகுதியில் குவிக்கப்பட்டனர். தொடர்ந்து கார்டன் சிறு வியாபாரிகள் சங்க நிர்வாகிகள், காவல்துறையினர் முன்னிலையில் நகராட்சி ஆணையர் காந்திராஜனிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது வியாபாரிகள், ஏற்கனவே இருந்த இடத்தில் கடை நடத்த அனுமதிக்குமாறு கோரிக்கை விடுத்தனர். அப்போது பூங்கா நுழை வாயிலில் இருந்து மேற்புறம் அல்லது திபெத் மார்க்கெட் பார்க்கிங் பகுதிகளில் கடைகள் அமைத்து கொள்ள அனுமதிப்பதாகவும், பழைய இடங்களில் அனுமதிக்கப்படாது என நகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் இப்பகுதிகளில் புதியதாக கடைகள் கட்டப்பட உள்ளன. அப்போது தற்போதுள்ள வியாபாரிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் கடைகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதனை சிறு வியாபாரிகள் ஏற்க மறுத்தனர். அப்போது, மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தி முடிவு எடுக்கலாம் என சிறு வியாபாாிகள் கேட்டு கொண்டதை தொடர்ந்து அதிகாரிகள் அங்கிருந்து சென்றனர். வியாபாரிகளும் தங்கள் போராட்டத்தை கைவிட்டனர்.  இதுகுறித்து ஆணையர் காந்திராஜனிடம் கேட்ட போது, ‘இப்பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு அங்கு 120 கடைகள் கட்டப்பட உள்ளன. இந்த கடைகள் கட்டப்பட்ட பின் இங்குள்ள வியாபாரிகளுக்கு கடைகள் வழங்க முன்னுரிமை வழங்கப்படும். கடைகள் கட்ட வசதியாக ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்பட்டு சர்வே செய்யப்பட உள்ளது’, என்றார்….

The post ஊட்டி தாவரவியல் பூங்கா நடைபாதையில் மீண்டும் கடை நடத்த அனுமதி கோரி வியாபாரிகள் போராட்டம் appeared first on Dinakaran.

Tags : Feeder Botanical Park ,Feeder ,Feedi Botanical Park Road ,Dinakaran ,
× RELATED சென்னை பெசன்ட் நகர் கடற்கடையில்...