சென்னை: ராஜேஷ்.எம் இயக்கத்தில் ஜெயம் ரவி, பிரியங்கா அருள் மோகன், பூமிகா, நட்டி நடித்துள்ள ‘பிரதர்’ என்ற படம், வரும் 31ம் தேதி திரைக்கு வருகிறது. இப்படம் தொடர்பான நிகழ்ச்சியில் பங்கேற்ற ஜெயம் ரவி, தன் சொந்த வாழ்க்கை குறித்து கூறியிருப்பதாவது: ஒரு படத்தில் நான் நன்றாக நடிக்கவில்லை என்றால், அதைப்பற்றி சொல்லுங்கள். நன்றாக நடித்துள்ளேன் என்றால், மனம் திறந்து பாராட்டுங் கள்.
குறிப்பிட்ட விருதுக்கு நான் தகுதி இல்லாதவன் என்று சொன்னால், அது ஒரு நியாயமான கருத்தாக இருந்தால் கேட்டுக்கொள்வேன். என் நடிப்பில் ஏதாவது குறைகள் சொன்னால், அடுத்த படத்தில் அதை நீக்கி சிறப்பாக நடிக்க முயற்சி செய்வேன். ஆனால், என் தனிப்பட்ட வாழ்க்கை எனக்கு மட்டும்தான் தெரியும். என்னென்ன நடக்கிறது என்பதை நான் மட்டுமே அறிவேன். எனக்கு அதிகமான நண்பர்கள் கிடையாது. அதையும் தாண்டி என் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து யார், என்ன பேசினாலும் அது என்னை பாதிக்காது.
என்னைப் பற்றி நன்கு தெரிந்தவர்கள் சிலர்தான். அவர்களுக்கு மட்டுமே என் தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி தெரியும். சினிமா என்பது பொதுவான தளம். என் நடிப்பை விமர்சிக்கலாம். சினிமாவையும், என் தனிப்பட்ட வாழ்க்கையையும் பிரித்து வைத்துள்ளேன். எனவே, மற்றவர்கள் என் தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி பேசுவது என்னை பாதிக்காது. தனிப்பட்ட விஷயங்களை நானே பார்த்துக்கொள்கிறேன். யாரும் அதுபற்றி பேச வேண்டாம் என்று கேட்டுக்ெகாள்கிறேன்.
The post சிலருக்கு மட்டுமே என் தனிப்பட்ட வாழ்க்கை தெரியும்: சொல்கிறார் ஜெயம் ரவி appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.