×

அம்பாளுக்கு ஆடி வெள்ளிக்கிழமைகளில் நவசக்தி அர்ச்சனை

ஆதிபராசக்தியான பார்வதி தேவியை ஒன்பது வகையான சக்திகள் சேர்ந்த மகா சக்தியாகச் சொல்கிறார்கள். அந்த ஒன்பது சக்திகளுக்கு நவசக்திகள்  என்று பெயர். நவசக்திகளின் பெயர்கள் என்னென்ன என்பதில் இரண்டு வகையான கருத்துக்கள் உண்டு. சர்வபூதமணி,  மனோன்மணி பலப்பிரதமணி  பலவிகரணி  கலவிகரணி காளி ரௌத்ரி கேட்டை வாமை என்ற ஒன்பது சக்திகளே நவசக்திகள் என்பது ஒரு கருத்து.

* வாமா- சர்க்கரைப் பொங்கல் - முறுக்கு - முல்லை.
* ஜ்யேஷ்டா- கடலை சாதம்- வடை- வாசமல்லி
* ரௌத்ரி - எள்ளு சாதம்- அதிரசம்- வில்வம்
* காளி- தேங்காய் சாதம்- சுழியன்- செங்கழுநீர்
* பலவிகரணீ- புளி சாதம்- தேன் குழல்- செவ்வரளி.
* கலவிகரணீ- அக்கார அடிசல்- லட்டு- சம்மங்கி.
* பலப்ரமதினீ- புளியோதரை- ஜிலேபி- செம்பருத்தி.
* சர்வபூத தமனீ- எலுமிச்சை சாதம்- திரட்டுப்பால்- ரோஜா.
* மனோன்மணி- தயிர் சாதம்- பாயசம்- தாமரை.

அர்ச்சனை முடிந்ததும் எல்லா நிவேதனமும் செய்து மலர்கள் ஒன்பது சேர்த்து புஷ்பாஞ்சலி செய்ததும், தோடி, கல்யாணி, காம்போதி, பைரவி, பிலகரி,  பந்துவராளி, புள்ளாகவரளி, நீலாம்பரி, வசந்தா ராகங்களைப் பாடி ஆசீர்வாதம் சொல்லி, ஒன்பது பெண்களும் அம்மனுக்கு ஒரே சமயத்தில் கற்பூர  ஆரத்தி எடுக்கிறார்கள். மகாசக்தியான பார்வதி தேவி எல்லா வகையான சக்தியாகவும் இருப்பவள்.

எனவே உமாதேவியை நவசக்திகளின் இருப்பிடமாக வழிபடுவது ஆகம நூல்களின் கருத்து. இப்படி ஒரே சமயத்தில் ஒன்பது சக்திகளையும் ஒன்பது  வகையான மலர்களால் ஒன்பது அர்ச்சகர்கள் அர்ச்சிப்பார்கள். இது நவசக்தி அர்ச்சனையாகும். மயிலாடுதுறைக்கு அருகில் உள்ளது தருமபுரம் ஆதீனம்.  ஆதீனத்தின் நிர்வாகத்தில் 27 தேவஸ்தானங்கள் இருக்கின்றன. தேவஸ்தானங்களில் இருக்கும் அம்பாளுக்கு ஆடி வெள்ளிக்கிழமைகளில் நவசக்தி  அர்ச்சனை ஆண்டுதோறும் நடப்பது வழக்கம்.

- ந. பரணிகுமார்

Tags :
× RELATED சுந்தர வேடம்