×

பல ஆண்டாக ஒரே காவல் நிலையத்தில் பணியாற்றிய 24 தனிப்பிரிவு காவலர்கள் 14 எஸ்ஐ பணியிட மாற்றம்: எஸ்பி அதிரடி உத்தரவு

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் திருத்தணி, திருவள்ளூர், ஊத்துக்கோட்டை, கும்மிடிப்பூண்டி, பொன்னேரி என 5 காவல் கோட்டங்கள் உள்ளன. இவற்றில் பல ஆண்டுகளாக ஒரே காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் தனிப்பிரிவு காவலர்களை பணியிட மாற்றம் செய்ய எஸ்.பி பகேர்லா செபாஸ் கல்யாண் முடிவு செய்தார். அதன்படி, மாவட்டம் முழுவதும் 14 சப்-இன்ஸ்பெக்டர்களும், 24 தனிப்பிரிவு காவலர்களும் பணியிட மாற்றம் செய்து எஸ்.பி உத்தரவிட்டுள்ளார். 14 எஸ்ஐக்கள் பணியிட மாற்ற விவரம்: மணவாளநகர் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த எஸ்.கணேஷ் திருவள்ளூர் நகர காவல் நிலையத்திற்கும், எஸ்பி. அலுவலகத்தில் பணியாற்றி வந்த ஏ.சுரேஷ் மணவாளநகர் காவல் நிலையத்திற்கும், ஊத்துக்கோட்டை காவல் நிலையத்தில் பணியாற்றிய எஸ்.பிரதாபன் ஆரணி காவல் நிலையத்திற்கும், ஆரம்பாக்கம் காவல் நிலையத்தில் பணியாற்றிய பி.ராஜூ பெரியபாளையம் காவல் நிலையத்திற்கும், ஆரணி காவல் நிலையத்தில் பணியாற்றிய என்.மோகன் மாவட்ட குற்றப்பிரிவுக்கும், வெங்கல் காவல் நிலையத்தில் பணியாற்றிய டி.சுப்பிரமணி மாவட்ட குற்றப்பிரிவுக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.இதேபோல், பொதட்டூர்பேட்டை காவல் நிலையத்தில் பணியாற்றிய எம்.பூபாலன் திருவாலங்காடு காவல் நிலையத்திற்கும், பள்ளிப்பட்டு காவல் நிலையத்தில் பணியாற்றிய டி.ஜெய்சங்கர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உள்ள சிறப்பு தனிப்பிரிவுக்கும், புல்லரம்பாக்கம் காவல் நிலையத்தில் பணிபுரிந்த ஏ.சிவா ஊத்துக்கோட்டை காவல் நிலையத்திற்கும், பெரியபாளையம் காவல் நிலையத்தில் பணிபுரிந்த என்.பார்த்திபன் மாவட்ட தனிப்பிரிவுக்கும், ஊத்துக்கோட்டை காவல் நிலையத்தில் பணிபரிந்த வி.செந்தில்முருகன் மாவட்ட தனிப்பிரிவுக்கும், கும்மிடிப்பூண்டி காவல் நிலையத்தில் பணிபுரிந்த வி.ஜி.உதயன் ஆரம்பாக்கம் காவல் நிலையத்திற்கும், ஆரம்பாக்கம் காவல் நிலையத்தில் பணிபுரிந்த பி.குமார் கும்மிடிப்பூண்டி காவல் நிலையத்திற்கும், பள்ளிப்பட்டு காவல் நிலையத்தில் இருந்து மாற்றப்பட்ட டி.நாகபூஷணம் மீண்டும் அதே பள்ளிப்பட்டு காவல் நிலையத்திற்கும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 24 தனிப்பிரிவு காவலர்கள் பணியிட மாற்ற விவரம்: மப்பேடு காவல் நிலைய தனிப்பிரிவு தலைமை காவலராக இருந்த நீலமேகம் திருவளளூர் நகர காவல் நிலையத்திற்கும், கடம்பத்தூரில் கிரேட் 1 ஆக பணியாற்றி வந்த என்.ராஜன் திருவள்ளூர் தாலுகா காவல் நிலையத்திற்கும், திருவள்ளூர் தாலுகா காவல் நிலையத்தில் கான்ஸ்டபிளாக இருந்த பி.ஆனந்தன் கடம்பத்தூர் காவல் நிலையத்திற்கும், திருவள்ளூர் நகர காவல் நிலையத்தில் தலைமை காவலராக இருந்த கே.வெங்கடேசன் மணவாளநகர் காவல் நிலையத்திற்கும், கடம்பத்தூர் காவல் நிலையத்தில் கிரேட் 1ஆக பணியாற்றி வந்த ஜி.கணேசன் மப்பேடு காவல் நிலையத்திற்கும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதேபோல், திருவள்ளூர் நகர காவல் நிலையத்தில் கான்ஸ்டபிளாக இருந்த கே.செல்வகுமார் புல்லரம்பாக்கம் காவல் நிலையத்திற்கும், பென்னாலூர்பேட்டை காவல் நிலையத்தில் கான்ஸ்டபிளாக இருந்த எஸ்.ராஜ்குமார் ஊத்துக்கோட்டை காவல் நிலையத்திற்கும், பெரியபாளையம் காவல் நிலையத்தில் கிரேட் 1ஆக பணியாற்றி வந்த இ.கமலநாதன் மீண்டும் அதே பெரியபாளையம் காவல் நிலையத்திற்கும் மாற்றம் செய்யப்பட்டள்ளனர். இதேபோல், ஆரம்பாக்கம் காவல் நிலையத்தில் கிரேட் 1ஆக பணியாற்றி வந்த பி.குமரவேல் ஆரணி காவல் நிலையத்திற்கும், பெரியபாளையம் காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வந்த ஆர்.அருள்தாஸ் பென்னாலூர்பேட்டை காவல் நிலையத்திற்கும், ஆரணி காவல் நிலைய தலைமை காவலராக பணியாற்றி வந்த ஏ.தசரதன் வெங்கல் காவல் நிலையத்திற்கும், பொதட்டூர்பேட்டை காவல் நிலையத்தில் கான்ஸ்டபிளாக இருந்த ஆர்.லோகேஷ் திருத்தணி காவல் நிலையத்திற்கும், கனகம்மாசத்திரம் காவல் நிலையத்தில் கான்ஸ்டபிளாக இருந்த ஆர்.வருண்குார் திருவாலங்காடு காவல் நிலையத்திற்கும், பொதட்டூர்பேட்டை காவல் நிலையத்தில் கான்ஸ்டபிளாக இருந்த ஆர்.நடராஜன் கனகம்மாசத்திரம் காவல் நிலையத்திற்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.அதேபோல், திருவள்ளூர் நகர காவல் நிலையத்தில் தலைமை காவலராக இருந்த ஏ.முரளி ஆர்.கே.பேட்டை காவல் நிலையத்திற்கும், பொதட்டூர்பேட்டை காவல் நிலையத்தில் கான்ஸ்டபிளாக இருந்த டி.எம்.ஹேமகுமார் பள்ளிப்பட்டு காவல் நிலையத்திற்கும், ஆர்.கேபேட்டை காவல் நிலையத்தில் கான்ஸ்டபிளாக இருந்த வி.எஸ்.நித்தின் ஆனந்த் பொதட்டூர்பேட்டை காவல் நிலையத்திற்கும், பெரியபாளையம் காவல் நிலையத்தில் தலைமை காவலராக இருந்த எம்.குமரன் பொன்னேரி காவல் நிலையத்திற்கும், பெரியபாளையம் காவல் நிலையத்தில் தலைமை க்காவலராக இருந்த கே.ரவி திருப்பாலைவனம் காவல் நிலையத்திற்கும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.மேலும், கும்மிடிப்பூண்டி காவல் நிலையத்தில் கிரேட் 1ஆக இருந்த என்.சுரேஷ் அதே கும்மிடிப்பூண்டி காவல் நிலையத்திற்கும்,  கவரப்பேட்டையில் கான்ஸ்டபிளாக இருந்த ஆர்.ராமதாஸ் சிப்காட் காவல் நிலையத்திற்கும், கும்மிடிப்பூண்டி காவல் நிலையத்தில் தலைமை காவலராக இருந்த எம்.லட்சுமிபதி ஆரம்பாக்கம் காவல் நிலையத்திற்கும், கவரப்பேட்டை காவல் நிலையத்தில் கிரேட் 1ஆக இருந்த ஆர்.சுரேஷ் மீண்டும் அதே கவரப்பேட்டை காவல் நிலையத்திற்கும், சிப்காட் காவல் நிலையத்தில் கான்ஸ்டபிளாக இருந்த எல்.சீனிவாசன் பாதிரிவேடு காவல் நிலையத்திற்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். …

The post பல ஆண்டாக ஒரே காவல் நிலையத்தில் பணியாற்றிய 24 தனிப்பிரிவு காவலர்கள் 14 எஸ்ஐ பணியிட மாற்றம்: எஸ்பி அதிரடி உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Thiruvallur ,Thiruvallur district ,Uthukkotta ,Gummdippundi ,Bonneri ,
× RELATED மீஞ்சூரில் இளைஞர் கொலை செய்யப்பட்ட வழக்கில் ஒருவர் கைது