×

ரேஷன் கார்டு பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம் சென்னையில் நாளை மக்கள் குறைதீர் முகாம்: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: ”ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம் செய்ய சென்னையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெறும்” என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு:ஜூலை, 2022 மாதத்திற்கான மாதாந்திர பொது விநியோக திட்ட மக்கள் குறைதீர் முகாம் சென்னையில் உள்ள 19 மண்டல உதவி ஆணையர் அலுவலகங்களில் 9ம் தேதி (நாளை) காலை 10 மணிமுதல் பிற்பகல் 1 மணி வரை நடக்கிறது. குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், கைப்பேசி எண் பதிவு மாற்றம் செய்தல் மற்றும்  புதிய குடும்ப அட்டை நகல், குடும்ப அட்டை கோரும் மனுக்களை பதிவு செய்தல் ஆகிய சேவைகள் மேற்கொள்ளப்படும்.மேலும், நியாய விலைக் கடைகளில் பொருள் பெற நேரில் வருகை தர இயலாத மூத்த குடிமக்கள் உள்ளிட்டோருக்கு அங்கீகாரச் சான்று     வழங்கப்படும். பொது விநியோகக் கடைகளின் செயல்பாடுகள், தனியார் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் அல்லது சேவைகளில் குறைபாடுகள் குறித்த புகார்கள் ஏதேனும் இருப்பின் அவற்றை பொதுமக்கள் இந்த முகாமில் தெரிவித்தால் குறைகளை விரைந்து தீர்வு செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். சென்னையிலுள்ள 19 மண்டல அலுவலக பகுதிகளில் உள்ள குடும்ப அட்டைதாரர்கள் இந்த சேவையை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்….

The post ரேஷன் கார்டு பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம் சென்னையில் நாளை மக்கள் குறைதீர் முகாம்: தமிழக அரசு அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Tomorrow People's Reduction Camp ,Chennai ,Tamil Nadu ,Govt ,Deferment ,Camp ,Tomorrow People's Reduction ,Tamil Nadu Government ,
× RELATED அரசின் திட்டங்களால் அரசு பள்ளிகளில்...