×

மின்வாரியத்தில் உள்ள காலிப்பணியிடத்தை நிரப்ப தொழிற்சங்கம் அரசுக்கு கோரிக்கை

சென்னை: தமிழ்நாடு மின்வாரிய தொழிற்சங்கத்தினர், அரசுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழகத்தில் ஏற்கனவே தேர்வு செய்து வைத்துள்ள கேங்மேன் பணியாளர்களை உடனடியாக பணி நியமனம் செய்ய வேண்டும். ஏற்கனவே விண்ணப்பித்து காத்திருக்கும் 2,900 கள உதவியாளர்கள் பணியிடங்களுக்கான தேர்வு நடத்தி உடனடியாக பணியமர்த்திட வேண்டும். இதுவரை நடந்துள்ள கேங்மேன் விபத்துகள் குறித்த விசாரணை நடத்தி இறந்துள்ள கேங்மேன் குடும்பங்களுக்கு 50,00,000 நிவாரணமும், வாரிசுப் பணியும் அளித்திட வேண்டுகிறோம். காலியிடங்களை 5000 கேங்மேன், 10,000 ஒப்பந்த தொழிலாளர்கள் மற்றும் 2900 மிஜிமி கள் உதவியாளர்களை கொண்டு உடனடியாக நிரப்பிட வேண்டுகிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. …

The post மின்வாரியத்தில் உள்ள காலிப்பணியிடத்தை நிரப்ப தொழிற்சங்கம் அரசுக்கு கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Chennai ,Tamil Nadu Electrical Union ,Gangman ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED சென்னை கோயம்பேடு மேம்பாலத்தில் ஆண்...