×

சாலை விபத்தில் மூதாட்டி பலி

புழல்: புழல் அருகே கன்னடபாளையம் பகுதியை சேர்ந்தவர் ஆனந்தி (62). இவர் கடந்த 20ம் தேதி புழல் காவாங்கரை சிக்னல் அருகே ஜிஎன்டி சாலையை கடக்க முயன்றார். அப்போது சோழவரத்தில் இருந்து சென்னை நோக்கி அசுர வேகத்தில் வந்த ஒரு பைக் இவர் மீது பயங்கரமாக மோதியது. இதில், தூக்கி வீசப்பட்ட அவர் படுகாயம் அடைந்தார். பைக்கில் வந்தவர் நிற்காமல் சென்றார். இந்நிலையில், அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை அவர் பரிதாபமாக பலியானார். புகாரின்பேரில், மாதவரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பியோடிய மாதனாங்குப்பத்தை சேர்ந்த அசோக் சங்கர்லால் (21) என்பவரை கைது செய்தனர்….

The post சாலை விபத்தில் மூதாட்டி பலி appeared first on Dinakaran.

Tags : Puzhal ,Anandi ,Kannadapalayam ,Puzhal Kavankarai Signal ,
× RELATED புழல் பகுதியில் பயனற்ற மாநகராட்சி...