×

காருக்குள் அழுகிய ஆண் சடலம் மீட்பு

பூந்தமல்லி: மதுரவாயல் அருகே ஆலப்பாக்கம் பிரதான சாலை ஓரமாக கடந்த 2 நாட்களாக ஒரு கால்டாக்சி கார் கேட்பாரற்று நின்றிருந்தது. அந்த காரிலிருந்து துர்நாற்றம் வீசுவதாக நேற்று முன்தினம் இரவு மதுரவாயல் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அனாதையாக நின்றிருந்த கால்டாக்சி காரின் கதவை திறந்து பார்த்தனர். அதில், டிரைவர் சீட்டில் அழுகிய நிலையில் ஒரு ஆண் சடலம் கிடப்பது தெரியவந்தது. அந்த சடலத்தை போலீசார் மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். வழக்குப்பதிவு செய்து, கால்டாக்சி டிரைவரான அவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர், காரில் இருந்த ஏசியில் காஸ் கசிவு ஏற்பட்டதால் மூச்சு திணறி இறந்தாரா அல்லது வேறு காரணமா என விசாரிக்கின்றனர்….

The post காருக்குள் அழுகிய ஆண் சடலம் மீட்பு appeared first on Dinakaran.

Tags : Poonthamalli ,Alapakam ,Maduravayal ,Dinakaran ,
× RELATED சென்னையில் மாணவனிடம் கஞ்சா பறிமுதல்