×

தெலங்கானா உண்மை சம்பவம் 4 கேர்ள்ஸ்

சென்னை: யூனிக் பிக்சர்ஸ் சார்பில் நரசிம்மலு தயாரித்து இருக்கும் படம், ‘4 கேர்ள்ஸ்’. தெலங்கானாவில் ஒரு பெண் மருத்துவருக்கு நடந்த பிரச்னையை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தில் பிரின்ஸ், சுருதிகா, மால்யா, அக்‌ஷனா, பிரியா நடித்திருக்கின்றனர். ஜெகதீஷ் ஒளிப்பதிவு செய்ய, ஜெயச்சந்திரா இசை அமைத்துள்ளார். ரவிகுமார் வசனம் எழுத, விக்டர் இணை தயாரிப்பு செய்துள்ளார். சிவா.எஸ் கதை, திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் உருவாகியுள்ள இப்படம், வரும் ஆகஸ்ட் மாதம் வெளியாகிறது. கஷ்டப்பட்டு தன் தங்கையை மருத்துவம் படிக்க வைக்கிறார், சுருதிகா. திடீரென்று அந்த தங்கை நான்கு கயவர்களால் சீரழிக்கப்பட்டு மரணம் அடைகிறாள். இதையடுத்து தன் தங்கையின் மரணத்துக்கு காரணமானவர்களை, தங்கையுடன் படித்த 3 தோழிகளின் துணையுடன் சுருதிகா எப்படி பழிவாங்குகிறார் என்பது கதை.

The post தெலங்கானா உண்மை சம்பவம் 4 கேர்ள்ஸ் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Narasimmalu ,Unique Pictures ,Telangana ,Prince ,Sruthika ,Mallya ,Akshana ,Priya ,Jagadish ,Jayachandra ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் ஆபரேஷன்...