×

சூர்யா படத்தின் 2ம் பாகத்தில் சந்தானம்: விக்ரமன் தகவல்

சென்னை: தமிழில் ‘புதிய பாதை’ என்ற படத்தில், இயக்குனர் ஆர்.பார்த்திபனிடம் உதவி இயக்குனராகப் பணியாற்றியவர், விக்ரமன். 1990ல் ரிலீசான ‘புது வசந்தம்’ என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான அவர், தொடர்ந்து ‘பெரும்புள்ளி’ ‘கோகுலம்’, ‘நான் பேச நினைப்பதெல்லாம்’, ‘புதிய மன்னர்கள்’, ‘பூவே உனக்காக’ ‘சூர்ய வம்சம்’, ‘உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்’,

‘வானத்தைப்போல’, ‘உன்னை நினைத்து…’, ‘ப்ரியமான தோழி’, ‘சென்னைக் காதல்’, ‘மரியாதை’, ‘நினைத்தது யாரோ’, தெலுங்கில் ‘வசந்தம்’, ‘செப்பாவே சிறுகாலி’ ஆகிய படங்களை இயக்கினார். அவரது மகன் விஜய் கனிஷ்கா, ‘ஹிட் லிஸ்ட்’ என்ற படத்தில் ஹீரோவாக அறிமுகமானார்.

2014ம் ஆண்டுக்குப் பிறகு விக்ரமன் எந்தவொரு படமும் இயக்கவில்லை. இந்நிலையில், சூர்யாவுடன் சினேகா, லைலா நடிப்பில் வெளியான ‘உன்னை நினைத்து…’ என்ற படத்தின் 2ம் பாகத்தை இயக்க முடிவு செய்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இந்தப்படத்துக்கான ஸ்கிரிப்ட் தயாராக இருப்பதாகவும், சந்தானம் ஹீரோவாக நடிப்பார் என்றும் சமீபத் தில் அளித்த பேட்டியில் விக்ரமன் தெரிவித்துள்ளார்.

The post சூர்யா படத்தின் 2ம் பாகத்தில் சந்தானம்: விக்ரமன் தகவல் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Suriya ,Vikraman ,CHENNAI ,R.Parthipan ,Kollywood Images ,
× RELATED கங்குவா ஒரு குழந்தை சூப்பர் ஸ்டார் படம் வருவதுதான் சரி: சூர்யா பேச்சு