×

நரசிம்மசுவாமி-நாமகிரி தாயாருக்கு திருக்கல்யாணம்

நாமக்கல்: நாமக்கல் நரசிம்மசுவாமிநாமகிரி தாயாருக்கு திருக்கல்யாண உற்சவம்  நடந்தது. நாமக்கல் நரசிம்மசுவாமி கோயிலில் பங்குனி தேர்திருவிழா கடந்த 14ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நாள்தோறும் பல்வேறு வாகனங்களில் சுவாமி திருவீதி உலா நடந்தது. நேற்று இரவு நரசிம்மசுவாமிக்கும்நாமகிரி தாயாருக்கும் திருக்கல்யாணம் நடந்தது. நரசிம்மர் மற்றும் ரங்கநாதருக்கு ஸ்ரீதேவி, பூதேவி தாயாருடன் பட்டாச்சாரியர்கள் திருமணம் நடத்தி வைத்தனர்.  திருக்கல்யாணத்தில் கலந்து கொண்ட பக்தர்கள் மொய் வழங்கினர். நாளை நரசிம்மசுவாமி கோயிலில் தேரோட்டம் நடைபெறுகிறது. மாலையில் ரங்கநாதர் மற்றும் ஆஞ்சநேயர் கோயில் தேரோட்டம் நடக்கிறது.

Tags : Narasimha Swamy ,Namagiri ,
× RELATED நரசிம்மசுவாமி கோயிலில் பங்குனி தேர்த்திருவிழா