- பெரம்பூர்
- நாகூர்மீரன்
- Vyasarbadi
- MKB நகர் சென்ட்ரல் அவென்யூ சாலை
- வியாசர்பாடி மகபி நகர்
- 7வது தெரு
- தின மலர்
பெரம்பூர்: வியாசர்பாடி புதுநகர் 7வது தெருவை சேர்ந்த நாகூர்மீரான் (27), வியாசர்பாடி எம்கேபி நகர் மத்திய அவென்யூ சாலையில் துணி கடை வைத்துள்ளார். கடந்த 8ம் தேதி இரவு 11 மணிக்கு இவரது கடை பூட்டை உடைத்து ரூ.40,000 மதிப்புள்ள துணிகள் திருடுபோனது. மேலும், கடை ஜன்னல் வழியாக உள்ளே நுழைந்த மர்ம நபர்கள் துணிகளை திருடிச் செல்வது சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது. இதுகுறித்து நாகூர்மீரான் எம்கேபி நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் விசாரணையில், கொடுங்கையூர் ஆர்.ஆர்.நகர் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் மற்றும் வியாசர்பாடி தாமோதரன் நகர் பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுவன் என இருவர் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரிந்தது. அவர்களை் நேற்று கைது செய்தனர். சிறுவர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்து, சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பி வைத்தனர்….
The post ரூ.40 ஆயிரம் துணி திருடிய 2 சிறுவர்கள் கைது appeared first on Dinakaran.