×

கன்னிகைபேர் ஊராட்சியில் கழிவுநீர் குளமாக மாறிய குடிநீர் குளம்

ஊத்துக்கோட்டை: கன்னிகைபேர் ஊராட்சியில்   40 ஆண்டுகால முன்பு மக்களின் குடிநீர் ஆதாரமான  பெரிய குளத்தை தூர்வாரி பூங்கா அமைக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.  திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம் பெரியபாளையம் அருகே கன்னிகைபேர் பகுதியில் 6000 க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர் இந்நிலையில் கிராம சேவை மையம் கட்டிடம் ,நூலக கட்டிடம் பின்புறம் பெரியகுளம் உள்ளது .இக்குளத்தின் நீரை 1980ஆம் ஆண்டில் கன்னிகைபேர்  கிராம பொதுமக்களின் குடிநீர் நீராதாரமாக பயன்படுத்தி வந்தனர் . தற்போது  பெரியகுளம்  பராமரிப்பு இல்லாத காரணத்தினால் அதில் நாணல்கள்,  முட்புதர்கள், செடி கொடிகள் வளர்ந்துள்ளது, மேலும் குளத்தின் சுற்றியுள்ள குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் இதில் திறந்துவிடப்படுகிறது, இதுமட்டுமல்லாமல் அப்பகுதியில் உள்ள இறைச்சி கடைகளில் இருந்து கழிவுகளை குளத்தில் கொட்டுவதால் அதிலுள்ள நீர் மாசு ஏற்பட்டு துர்நாற்றம் வீசுகிறது. 40 ஆண்டுகளுக்கு முன்பாக மக்களின் குடிநீர் ஆதாரமாக இருந்த கன்னிகைபேர் பெரிய குளம் கழிவுநீர் குளமாக மாறியுள்ளது. இதனை தூர்வாரி கரையை பலப்படுத்தி  பூங்கா அமைத்து மீண்டும் பெரியகுளத்தை  பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என அப்பகுதி மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்….

The post கன்னிகைபேர் ஊராட்சியில் கழிவுநீர் குளமாக மாறிய குடிநீர் குளம் appeared first on Dinakaran.

Tags : Kannikaiber Panchayat ,Uthukkottai ,Durwari Park ,
× RELATED மின்விளக்குகள் எரியாத புதிய மேம்பாலம்: பெரியபாளையம் அருகே விபத்து அபாயம்