×

முகூர்த்த நாள், வரத்து குறைவு காரணமாக பூக்களின் விலை கிடுகிடு உயர்வு

சென்னை: முகூர்த்த நாள் மற்றும் வரத்து குறைவு காரணமாக, கோயம்பேடு மார்க்கெட்டில், மல்லி, கனகாம்பரம், உள்ளிட்ட அனைத்து பூக்களின் விலையும் உயர்ந்துள்ளது. ஆந்திரா, கர்நாடகா மற்றும் தமிழகத்தில் உள்ள திண்டுக்கல், மதுரை, வேலூர், நிலக்கோட்டை, திருச்சி, ஒசூர் மற்றும் சேலம் ஆகிய பகுதிகளில் இருந்து தினமும் கோயம்பேடு மார்க்கெட்டிற்கு மல்லி, கனகாம்பரம், சாமந்தி போன்ற பல வகையான பூக்கள், கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வருகிறது. நேற்று முகூர்த்த நாள் என்பதாலும், பூக்களின் வரத்து குறைவு காரணமாகவும் பூக்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. நேற்று காலை ஒரு கிலோ மல்லி, கனகாம்பரம் ரூ.500க்கும், முல்லை ரூ.300க்கும் விற்பனை செய்யப்பட்டது. சாமந்தி, அரளி பூ ரூ.160க்கும், பன்னீர் ரோஸ் 40க்கும் சாக்லேட் ரோஸ் 50க்கும் விற்கப்பட்டது. இதுகுறித்து, கோயம்பேடு பூ மார்க்கெட் பொருளாளர் பெருமாள் கூறும்போது, ‘‘நேற்று முகூர்த்த நாள் என்பதாலும், பூக்களின் வரத்து குறைவாலும் விலை உயர்ந்துள்ளது. கனகாம்பரம், சாமந்தி, சம்பங்கி, அரளி பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. முகூர்த்த நாள் முடிந்தபிறகு பூக்களின் விலை படிப்படியாக குறையும்.’’ என்றார்….

The post முகூர்த்த நாள், வரத்து குறைவு காரணமாக பூக்களின் விலை கிடுகிடு உயர்வு appeared first on Dinakaran.

Tags : Mukurtha ,Chennai ,Koyambedu market ,Kanakambaram ,
× RELATED சென்னை கோயம்பேடு சந்தையில் காய்கறிகள் விலை கிடு கிடு உயர்வு