×

தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் கார் தொழிற்சாலை ஊழியர்களுக்கு பொதுமக்கள் ஆதரவு அளிக்க வேண்டும்: சிஐடியு கோரிக்கை

மறைமலைநகர்: தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் தனியார் கார் தொழிற்சாலை ஊழியர்களுக்கு பொதுமக்கள் ஆதரவளிக்க வேண்டும் என சிஐடியு கோரிக்கை விடுத்துள்ளது.செங்கல்பட்டு மாவட்டம், மறைமலைநகர் பகுதியில் சொகுசு கார் தயாரிக்கும் தனியார் தொழிற்சாலை இயங்கி வருகின்றது. இதில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணி செய்து வருகின்றனர். மேலும் இத்தொழிற்சாலைக்கு உதிரிபாகம் தயாரித்து கொடுக்கும் நூற்றுக்கணக்கான தொழிற்சாலைகள் இப்பகுதியில் செயல்பட்டுவருகின்றன. இந்த தொழிற்சாலைககைள நம்பி ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்களும்,அவர்களது குடுமபங்களும் உள்ளன. இந்நிலையில், இத்தொழிற்சாலை நிர்வாகம் தொழிற்சாலையை மூடுவதாக, கடந்த ஒரு ஆண்டுக்கு முன்னர் அறிவித்தது. தற்போது. அந்த தொழிற்சாலை ஒரு சில மாதங்களில் மூடப்படும் நிலையில் உள்ளதால் அங்கு பணிபுரியும் ஏராளமான தொழிலாளர்கள் கடந்த பத்து நாட்களுக்கு மேலாக தொடர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.இந்நிலையில் பத்து நாட்களுக்கு மேலாக போராடும் தொழிலாளர்களுக்கு அதரவு தெரிவித்தும், இந்த ஆலையை மூடுவதை கைவிட வலியுறுத்தியும், இப்பிரச்னையில் தமிழக அரசு தலையிட்டு உரிய நடவடிக்கை எடுத்திட வலியுறுத்தியும், ஆலை மூடலை கைவிட்டு, தொழிலாளர்களுக்கு வேலையை உத்ரவாதப்படுத்திட வலியுறுத்தியும், சிஐடியு சார்பில், மறைமலைநகர் பாவேந்தர் சாலையில் சிஐடியு மாவட்டத் தலைவர் கே.சேஷாத்திரி தலைமையில்   கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் சிஐடியு மாநில பொதுச் செயலாளர் எஸ்.கண்ணன்  பேசியதாவது. இத் தொழிற்சாலையில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள்  பணியில்  உள்ளனர். இவர்களின்   பணி பாதுகாப்பு  தற்போது கேள்விக்குறியாகி உள்ளது. மேலும், இந்நிறுவனத்திற்கு உதிரிபாகம் தயாரிக்கும் நூற்றுக்கணக்கான நிறுவனங்களும் மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதால், ஒருலட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்களும் அவர்களது குடும்பமும் பாதிக்கப்படும் அபாய நிலைக்கு தள்ளபபட்டுள்ளது. இதனால் இப்பகுதியில் பொருளாதார நெருக்கடி ஏற்படும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.  இந்நிலையில், அரசு உடனடியாக இப்பிரச்னையில் தலையிட்டு தொழிலாளர்களுக்கு தொடர்ந்து பணி வழங்கிட வேண்டும். செங்கல்பட்டு மாவட்ட மக்கள் போராடும் இத் தொழிலாளர்களுக்கு ஆதரவு வழங்க வேண்டும்.’’  என்றார்….

The post தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் கார் தொழிற்சாலை ஊழியர்களுக்கு பொதுமக்கள் ஆதரவு அளிக்க வேண்டும்: சிஐடியு கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : CID ,Brinkalputtu ,
× RELATED பிரஜ்வல் எங்கே இருக்கிறார் என தெரியவில்லை: கர்நாடக அமைச்சர் தகவல்