×

பணிக்கு கிளம்பியபோது மாரடைப்பால் காவலர் மரணம்

பெரம்பூர்: அரக்கோணம் பழனிபேட்டை கிராமம் பகுதியை சேர்ந்தவர் கதிரவன். இவர் செம்பியம் காவல் நிலையத்தில் தற்போது குற்றப்பிரிவு ஆய்வாளருக்கு டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு திருமணமாகி கல்பனா என்ற மனைவியும், பிரியதர்ஷன், கரன்வர்ஷன் என்ற மகன்களும் உள்ளனர். இந்நிலையில், நேற்று காலை வழக்கம்போல் பணிக்கு கிளம்புவதற்காக வீட்டில் குளித்துக்கொண்டிருந்தார். அப்போது திடீரென அவர் மயக்கமடைந்து குளியலறையிலேயே விழுந்தார். அதன்பிறகு 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு மருத்துவர்கள் அவரை பரிசோதனை செய்தனர். அதில் அவர் மாரடைப்பு காரணமாக இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனால் அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். தகவலறிந்த செம்பியம் போலீசார் அரக்கோணத்திற்கு நேரில் சென்று உயிரிழந்த கதிரவனுக்கு மரியாதை செய்தனர்….

The post பணிக்கு கிளம்பியபோது மாரடைப்பால் காவலர் மரணம் appeared first on Dinakaran.

Tags : Perambur ,Katiravan ,Arakkonam Palanipet ,Sempiyam police station ,Dinakaran ,
× RELATED சிறுமியின் காதலை கண்டித்த தாயின்...