×

தங்கு தடையின்றி ஆவின் பொருட்கள்; ஓபிஎஸ் வலியுறுத்தல்

சென்னை: அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கை: ஆவின் நிறுவனம் நிலைப்படுத்தப்பட்ட பால், சிறப்பு நிலைப்படுத்திய பால், சமன்படுத்தப்பட்ட பால் என பல பால் வகையினையும், நெய், வெண்ணெய், தயிர் போன்ற பலவிதமான பால் உப பொருட்களையும் பல்வேறு அளவுகளில் தயாரித்து விற்பனை செய்து வருகிறது. ஆவின் பால் மற்றும் இதர பால் உப பொருட்களின் விலை வெளிச் சந்தையைவிட குறைவு என்பதால்,  பொதுமக்கள், குறிப்பாக ஏழை, எளிய, நடுத்தர மக்கள் ஆவின் பூத்துகளை நாடுகின்றனர். இந்த நிலையில், ஆவின் பால் முன்பைவிட குறைந்த அளவிலேயே ஆவின் பூத்துகளுக்கு விநியோகிக்கப்படுவதாகவும், காலை 8 மணிக்கு மேல் சென்றால் பால் இல்லை என்ற சூழ்நிலை நிலவுவதாகவும், சில சமயங்களில் ப்ரீமியம் பால் மட்டும் கிடைப்பதாகவும், இதன் காரணமாக சில்லரை விலையில் தினமும் பணம் கொடுத்து பால் வாங்கும் ஏழை, எளிய மக்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்றும், அவர்கள் எல்லாம் கூடுதல் விலை கொடுத்து தனியார் பாலை வாங்கும் நிலைக்கு தள்ளப்படுவதாகவும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.  ஆவின் பால் நுகர்வோரின் எண்ணிக்கைக்கு ஏற்ப பால் உற்பத்தியினை அதிகரிக்க வேண்டும் என்றும், 100 கிராம், 200 கிராம் அளவுகளில் பால் உப பொருட்களான நெய், பால்கோவா போன்றவை விற்பனை செய்யப்பட வேண்டுமென்றும் பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். எனவே, பால் வகைகள் அனைத்தையும் தாராளமாக விநியோகம் செய்யவும், சிறிய அளவிலான பால் உப பொருட்கள் பொதுமக்களுக்கு தங்கு தடையின்றி கிடைக்கவும் வழிவகை செய்ய வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது….

The post தங்கு தடையின்றி ஆவின் பொருட்கள்; ஓபிஎஸ் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Av ,OPS ,Chennai ,Bannerselvam ,Ave ,
× RELATED திருவண்ணாமலை மாவட்டத்தில் 3...