×

கோட்டை விட்ட அதிபர் பைடன் அமெரிக்க குழந்தைகளுக்கு புட்டிப் பால் பற்றாக்குறை: உடனடி இறக்குமதிக்கு உத்தரவு

வாஷிங்டன், : அமெரிக்காவில் குழந்தைகளுக்கான பால் பவுடர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இது குறித்து தனது கவனத்துக்கு கொண்டு வரப்படவில்லை என்று அதிபர் பைடன் வேதனை தெரிவித்தார்.அமெரிக்காவில் பிறக்கும் குழந்தைகளுக்கு பெரும்பாலும் புட்டிப்பால் தான் தரப்படுகிறது. தாய்ப்பால் கிடைப்பது மிகவும் அரிது. இதன் காரணமாக, அமெரிக்காவில் புட்டிப்பால் தயாரிக்க பயன்படும் பால் பவுடருக்கு எப்போதும் தேவை அதிகமாக இருக்கும். ஆனால், கடந்த சில மாதங்களாக இந்த புட்டிப்பால் பவுடருக்கு கடும் பற்றாக்குறை ஏற்பட்டு இருக்கிறது. உலகத்துக்கே படி அளிந்து கொண்டிருக்கும் அதிபர் பைடன், தனது நாட்டில் இதுபோன்ற சிறிய பிரச்னையில் கோட்டை விட்டு இருப்பது பெரும் சர்ச்சையாகி இருக்கிறது. இப்படிப்பட்ட ஒரு குறை அமெரிக்காவில் ஏற்பட்டு இருக்கிறது என்ற விவரம், சமீபத்தில்தான் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தில் உள்ள அபோட் ஊட்டச்சத்து நிறுவனம் தயாரித்த குழந்தைகளுக்கான பால் பவுடரை உட்கொண்ட 2 குழந்தைகள் உயிரிழந்தன. இதில் பாக்டீரியா இருந்ததை அமெரிக்க உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் கண்டறிந்தது. இதையடுத்து, பாதுகாப்பு காரணங்களுக்காக இந்நிறுவனம் கடந்த பிப்ரவரி முதல் மூடப்பட்டது.இதை தொடர்ந்து, அமெரிக்காவில் குழந்தைகளுக்கு வழங்கும் பால் பவுடர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. மார்ச், ஏப்ரல் மாதங்களில் இதன் பாதிப்பு தெரியவில்லை என்றாலும், மே 2ம் வாரத்துக்கு பிறகு, தற்போது நிலைமை மோசமாகி உள்ளது.இதையடுத்து, இந்த விவகாரம் அதிபர் பைடனின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டதாக வெள்ளை மாளிகை ஊடக செயலாளர் கரீன் ஜான் பியரி தெரிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து, தேசிய உணவு மற்றும் மருந்து கட்டுப்பாடு ஆணையம்., இந்த பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் நடவடிக்கையில் இறங்கியது. அதன் பரிந்துரைபடி, குழந்தைகளுக்கான பால் பவுடர் லண்டன், ஆஸ்திரேலியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட உள்ளது.லண்டனில் இருந்து வரும் ஜூன் 9ம் தேதி முதல், 3 வாரங்களுக்கு 37 லட்சம் 250 மிலி. பால் பவுடர் பாட்டில்களும் ஆஸ்திரேலியாவில் இருந்து 46 லட்சம் 250 மிலி. பாட்டில்களும் இறக்குமதி செய்யப்பட உள்ளன. பற்றாக்குறை பற்றி கவனத்துக்கு கொண்டு வரப்பட்டதும், குழந்தைகள் பால் பவுடர் தயாரிக்கும் பிரபல நிறுவனங்களின் கூட்டத்துக்கு அதிபர் பைடன் ஏற்பாடு செய்தார். ஆனால், அந்த கூட்டத்தில் அபோட் ஊட்டச்சத்து நிறுவனம் பங்கேற்கவில்லை. கூட்டத்துக்குப் பிறகு பைடன் அளித்த பேட்டியில், “ஏப்ரலுக்கு பிறகு பிரச்னை தீவிரமடையும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர். அரசு கவனத்தில் எடுத்து கொள்ளாததற்கு வருந்துகிறேன். ஒரு தந்தையாக, தாத்தாவாக குழந்தைக்கு தேவையான அத்தியாவசிய பொருளான பால் பவுடர் இல்லை என்றால் ஏற்படும் மன அழுத்தம் எப்படி பட்டது என்று எனக்கு நன்றாக தெரியும். அதை விட கொடுமையானது ஒன்றுமில்லை. ஆபரேஷன் ப்ளை பார்முலா மூலம் குழந்தைகளுக்கான பால் பவுடரை இறக்குமதி செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது,’ என்று தெரிவித்தார்….

The post கோட்டை விட்ட அதிபர் பைடன் அமெரிக்க குழந்தைகளுக்கு புட்டிப் பால் பற்றாக்குறை: உடனடி இறக்குமதிக்கு உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Chancellor ,Byden ,Washington ,United States ,Bidon ,
× RELATED அதிபர் தேர்தலில் பின்னடைவா?.. டொனால்ட்...