×

படப்பிடிப்பை முடித்தார் முத்தரசன்

சென்னை: எஸ்.ஏ.விஜயகுமார் இயக்கத்தில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் இரா.முத்தரசன், சமுத்திரக்கனி இணைந்து நடிக்க, இன்றைய சமூகத்தில் உணவுக்குப் பின்னால் இருக்கும் அரசியலைப் பற்றி அழுத்தமாகப் பேசும் படைப்பாக உருவாகியுள்ள படம், ‘அரிசி’. இப்படத்தின் முழு படப்பிடிப்பையும் முடித்த படக்குழுவினர், தற்போது இறுதிக்கட்ட பணிகளை தொடங்கியுள்ளனர். நம் அன்றாட உணவான அரிசியின் பின்னால் இருக்கும் அரசியலை, விவசாயத்தின் உண்மைகளைப் பற்றி பேசும் அழுத்தமான படைப்பாக இப்படம் உருவாகியுள்ளது.

மேற்கத்திய உணவை முன்மொழியும் கார்ப்பரேட், நம் பாரம்பரியத்தை நாம் அறியாமலேயே அழித்து வருகிறது. நம் சமூகத்தின் மிக முக்கியமான இப்பிரச்னையை அழுத்தமான திரைக்கதையுடன், ஆழமான படைப்பாக உருவாக்கியுள்ளார் எஸ்.ஏ.விஜயகுமார். இளையராஜா இசை அமைத்துள்ளார். ஜான்சன் ஒளிப்பதிவு செய்துள்ளார். சதீஷ் குரோசோவா எடிட்டிங் செய்துள்ளார். மோனிகா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் பி.சண்முகம் தயாரித்துள்ளார். எஸ்.எம்.பிரபாகரன், மகேந்திர பிரசாத் இணை தயாரிப்பு செய்துள்ளனர்.

The post படப்பிடிப்பை முடித்தார் முத்தரசன் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Mutharasan ,Chennai ,S.A. Vijayakumar ,State Secretary of ,Communist Party of India ,I.R. Mutharasan ,Samuthirakani ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED மத பிரச்சனைகளை கிளப்பி மக்களை...