×

கிராமத்தை பற்றி பேசும் ஆண்டவன்

சென்னை: வில்லியம் பிரதர்ஸ் புரொடக்சன்ஸ் தயாரிப்பில், ‘ஆண்டவன்’ திரைப்படம் உருவாகியுள்ளது. நாட்டில் ஒருபுறம் நகரங்கள் வாழ்கிறது. மறுபுறம் கிராமங்கள் அழிந்து கொண்டு வருகிறது என்ற கருத்துடன் படத்தை இயக்குகிறார் வி.வில்லிதிருக்கண்ணன். ஒருவர் கஷ்டத்தில் சரியான நேரத்தில் யார் உதவுகிறாரோ அவரே ஆண்டவனாகப் பார்க்கப்படுகிறார் என்பதே படத்தின் கதை.

இதில் கே.பாக்யராஜ் கலெக்டராக நடித்துள்ளார். டிஜிட்டல் விஷன் யூடியூபர் மகேஷ் கதையின் நாயகனாக நடிக்க, ஜோடியாக வைஷ்ணவி நடித்துள்ளார், முத்துச்செல்வம், காக்கா முட்டை ஆயா, உடுமலை ரவி, மங்கி ரவி மற்றும் பலர் நடித்துள்ளனர். மகி பாலன் கேமராவை கையாள, கபிலேஷ்வர், சார்லஸ்தனா இருவரும் இசை அமைத்துள்ளனர். எடிட்டிங் லெட்சுமணன். ஆண்டவன் படத்தை முத்துச்செல்வம், சேலையூர் எஸ்.எஸ்.சுரேஷ் இருவரும் இணைந்து தயாரித்துள்ளனர்.

The post கிராமத்தை பற்றி பேசும் ஆண்டவன் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Lord ,Chennai ,William Brothers Productions ,V. Villithirukannan ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED வளமான வாழ்வருளும் வராஹர்