×

முன்ஜாமீன் மனு செய்தவர்களை கைது செய்ய உத்தரவு

மதுரை:  முன்ஜாமீன் மனு செய்தவர்களை கைது செய்ய வேண்டுமென ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. மணல் திருட்டு, மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளில் பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குப் பதிவு செய்யப்பட்ட பலர் தங்களுக்கு முன் ஜாமீன் கோரி ஐகோர்ட் மதுரை கிளையில் மனு செய்திருந்தனர்.  இந்த மனுக்களை நேற்று விசாரித்த நீதிபதி பி.வேல்முருகன், வழக்குப்பதிவு செய்து நீண்ட நாட்கள் ஆகியும் போலீசார் ஏன் இதுவரையில் யாரையும் கைது செய்யவில்லை.  கைது செய்யாத காரணத்தினால் தான் அவர்கள் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்யும் நிலை ஏற்படுகிறது. இந்த மனுக்கள் தாக்கல் செய்யும் வரை ஏன் கைது செய்யவில்லை என கேள்வி எழுப்பினார். பின்னர்,  சம்பந்தப்பட்ட மனுதாரர்களை உடனடியாக கைது செய்து சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்….

The post முன்ஜாமீன் மனு செய்தவர்களை கைது செய்ய உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Madurai ,iCort Branch ,Munjameen ,Dinakaran ,
× RELATED சீசன் துவங்கியும் மாம்பழங்கள் வரத்து இல்லை