×

புற்றுநோயால் நடிகை பூனம் பாண்டே மரணமா: சந்தேகம் கிளப்பும் நெட்டிசன்கள்

மும்பை: கர்ப்பப்பை புற்றுநோய் காரணமாக பிரபல நடிகை பூனம் பாண்டே உயிரிழந்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆனால் இது பொய் தகவல் என்கிறார்கள் நெட்டிசன்கள். உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்தவரான பூனம் பாண்டே, பிரபல மாடல் அழகி ஆவார். 2011ஆம் ஆண்டு இந்திய அணி உலகக் கோப்பை போட்டியில் வென்றால் நிர்வாணமாக மைதானத்தில் வலம் வருவேன் எனக் கூறி பரபரப்பை ஏற்படுத்தியவர் பூனம் பாண்டே. அதன் பிறகு தனக்கென தனியாக இணையதளம் தொடங்கி அதில் அரை நிர்வாணப் புகைப்படங்களைப் பதிவிட்டு விமர்சனங்களை சந்தித்து வந்தார்.

சர்ச்சைக்குரிய நடிகையாக வலம் வந்த பூனம் பாண்டே தற்போது உயிரிழந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. கர்ப்பப்பை புற்றுநோய் காரணமாக பூனம் பாண்டே உயிரிழந்ததாக இன்ஸ்டாகிராமில் அவரது மேனேஜர் தெரிவித்துள்ளார். ஆனால் சில நாட்களுக்கு முன் வரை நன்றாக நிகழ்ச்சிகளில் பங்கேற்றவர் எப்படி இறக்க முடியும்? அவரது உடல் எங்கே? என்றெல்லாம் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியுள்ளதால் இந்த விவகாரம் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

 

The post புற்றுநோயால் நடிகை பூனம் பாண்டே மரணமா: சந்தேகம் கிளப்பும் நெட்டிசன்கள் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Poonam Pandey ,Mumbai ,Uttar Pradesh ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED உத்திரபிரதேசத்தில் பேருந்து – லாரி மோதி விபத்து: 6 பேர் உயிரிழப்பு