×

ஹிஜாப் அணிந்து தேர்வு எழுத எதிர்ப்பு கண்காணிப்பாளர் மீது நடவடிக்கை: ஜவாஹிருல்லா வலியுறுத்தல்

சென்னை: மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா நேற்று வெளியிட்ட அறிக்கை:கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே களமருதூர் அரசு மேல்நிலைப் பள்ளியில், 11ம் வகுப்பு ஆங்கில தேர்வு எழுத ஹிஜாப் அணிந்து வந்த 6 மாணவிகளை தேர்வு மைய கண்காணிப்பாளர் சரஸ்வதி, தேர்வு அறைக்குள் செல்ல விடாமல் தடுத்ததோடு, ஹிஜாப் அணிந்து தேர்வு எழுத கூடாது என்று கட்டளையிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து அந்த மாணவிகள் மன உளைச்சலுடன் ஹிஜாப் ஆடையை அகற்றி விட்டு தேர்வு எழுதியுள்ளனர். தமிழகம் சமூக நல்லிணக்கத்திற்கு முன்மாதிரியான மாநிலம். அரசின் வழிகாட்டுதலை பின்பற்றாமல் மாணவிகளுக்கு மன உளைச்சலை ஏற்படுத்திய அந்த ஆசிரியர் மீது பணியிட மாற்றம் எனும் நிலையை கடந்து, துறைரீதியான அதில் கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது….

The post ஹிஜாப் அணிந்து தேர்வு எழுத எதிர்ப்பு கண்காணிப்பாளர் மீது நடவடிக்கை: ஜவாஹிருல்லா வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Jawahirullah ,Chennai ,Humanist People's Party ,Kalamarudhur Government High School ,Ulundurpet, Kallakurichi district ,
× RELATED மாணவர் நலனில் அக்கறை கொண்டு சீரிய...