×

5 பேய்கள் கதையில் வில்லன் ஆனார் முனீஷ்காந்த்

சென்னை: யூடியூப் மூலம் பிரபலமான பரிதாபங்கள் கோபி, சுதாகர், சாரா, ஹரிதா உள்பட பலர் நடித்துள்ள படம், ‘ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது’. முக்கிய வேடத்தில் யாஷிகா ஆனந்த், முதல்முறையாக வில்லனாக முனீஷ்காந்த் நடித்துள்ளனர். வரும் 29ம் தேதி திரைக்கு வரும் இப்படம் குறித்து இயக்குநர் ரமேஷ் வெங்கட் கூறியதாவது: சென்னையிலுள்ள ஒரு தியேட்டரில் ‘ஏ’ படம் ஓடுகிறது. இதையறிந்த சில இளைஞர்களும், இளைஞிகளும் சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக, வேறுவழியின்றி அந்த தியேட்டருக்கு வந்து படம் பார்த்து ரசிக்கின்றனர். அப்போது திடீரென்று 5 பேய்கள் வசமாக அவர்களை சிறைபிடிக்கிறது. பேய்களிடம் இருந்து தப்பிக்க முயற்சிக்கும் அவர்களின் முயற்சி தோல்வி அடைகிறது. தியேட்டரை விட்டு வெளியேறவும் முடியாமல், பேய்களிடம் இருந்து தப்பிக்கவும் முடியாமல் உயிர் பயத்தில் தவிக்கும் அந்த இளைஞர்களும், இளைஞிகளும் அடுத்து என்ன செய்கிறார்கள் என்பது கதை. 5 பேய்களின் டிமாண்ட் என்ன என்பது இன்னொரு கிளைக்கதை. அவர்கள் எப்படி பேய் ஆனார்கள் என்பது சஸ்பென்ஸ். காமெடி, ஹாரர் திரில்லர் கதையுடன் படம் உருவாகியுள்ளது. முழுநீள படத்தில் முக்கால் பாகம் தியேட்டர் இடம்பெறுவதால், சென்னை புறநகரிலுள்ள தியேட்டரை வாடகைக்கு எடுத்து படப்பிடிப்பு நடத்தினோம்.

The post 5 பேய்கள் கதையில் வில்லன் ஆனார் முனீஷ்காந்த் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Munishkanth ,CHENNAI ,Paritabangal Gopi ,Sudhakar ,Sara ,Haritha ,YouTube ,Yashika Anand ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED சென்னை கோயம்பேடு மேம்பாலத்தில் ஆண்...