×

ஒரே மாதத்தில் ஓடிடிக்கு வந்த நயன்தாரா படம்

சென்னை: நயன்தாரா சோலோ ஹீரோயினாக நடித்த படம் ‘அன்னபூரணி’. இந்த படத்தை ஷங்கரின் உதவியாளர் நிலேஷ் கிருஷ்ணா இயக்கி இருந்தார். நயன்தாராவுடன் ஜெய் நடித்திருந்தார். இது நயன்தாராவின் 75வது படம் என்பதால் பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. இந்த படம் கடந்த 1ம் தேதி தியேட்டர்களில் வெளியானது. திருவரங்கத்தில் பிறந்த அக்ரஹாரத்து பெண்ணான நயன்தாரா அசைவ சமையலில் நிபுணராகும் கதை. இந்த படத்திற்கு ஒரு சில அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையிலும், படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. ஆனால், படம் வெளியான ஒருசில நாளிலேயே மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை உள்பட 4 மாவட்டங்கள் வெள்ளத்தில் தத்தளித்தன. இதனால் தியேட்டர்களும் மூடப்பட்டதால் அன்னபூரணி படத்தின் வசூல் பின்னடைவை சந்தித்தது.

மழை வெள்ளத்திற்கு பிறகு படத்தை மறு வெளியீடு செய்ய திட்டமிட்டார்கள். அதற்குள் வேறு பல புதிய படங்கள் வெளியானதால் முயற்சி கைவிடப்பட்டது. இந்த நிலையில் படத்தை தயாரிப்பு தரப்பு ஓடிடி தளத்தில் வெளியிடுகிறது. நெட்பிளிக்ஸ் நிறுவனம் கணிசமான தொகைக்கு படத்தை வாங்கி இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. வருகிற 29ம் தேதி ஓடிடி தளத்தில் வெளியிடப்படுவதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னணி நடிகையான நயன்தாராவின் படம் புயல் மழை வெள்ளம் காரணமாக ஒரே மாதத்திற்குள் ஓடிடியில் வெளியாவது திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

The post ஒரே மாதத்தில் ஓடிடிக்கு வந்த நயன்தாரா படம் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Nayandara ,Shankar ,Nilesh Krishna ,Jay ,Nayantara ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED ரத்னம் விமர்சனம்