×

தாம்பரம் தொகுதியில் உள்ள 40 அங்கன்வாடி மையங்களுக்கு உபகரணங்கள் வழங்க வேண்டும்: பேரவையில் எஸ்.ஆர்.ராஜா எம்எல்ஏ வலியுறுத்தல்

சென்னை: சட்டப் பேரவையில் கேள்வி நேரத்தின் போது தாம்பரம் எம்எல்ஏ எஸ்.ஆர்.ராஜா (திமுக) பேசியதாவது: தாம்பரம் தொகுதியில் 40 அங்கன்வாடி மைய கட்டிடங்கள் பராமரிக்கப்படாமல் இருக்கின்றன. இவற்றுக்கு தேவையான உபகரணங்களை வழங்குவதற்கு அரசு ஆவன செய்ய வேண்டும். அமைச்சர் கீதா ஜீவன்: பராமரிக்கப்பட வேண்டிய நிலையில் உள்ள மையங்களை நிச்சயமாக இந்த அரசு சிறப்பு கவனம் எடுத்து எம்எல்ஏ நிதியின் மூலம் மற்றும் அரசின் பல்வேறு துறைகளின் மூலம் கட்டித்தர  நடவடிக்கை எடுக்கப்படும்.எஸ்.ஆர்.ராஜா: தாம்பரம் சானடோரியத்தில் சமூக நலத்துறைக்கு சொந்தமான இடம் பல ஏக்கர் பயன்படாத நிலையில் இருக்கிறது. அங்கு பெண்களுக்கு பயிற்சி பள்ளி அமைத்து தர வேண்டும். முன்னாள் அமைச்சர் டி.டி.கிருஷ்ணமாச்சாரி இல்லத்திலேயே, எஸ்ஓஎஸ் வில்லேஜ் என்று ஒரு வில்லேஜ் இருக்கிறது. இதேபோல் தமிழகம் முழுவதும் அமைக்க வேண்டும். அமைச்சர் கீதா ஜீவன்: தாம்பரம் சேலையூர் பகுதியில், சமூக நலத் துறைக்கான இடங்கள் இருக்கிறது. அதை தொண்டு நிறுவனங்கள் மூலம் மேம்படுத்திட குழந்தைகள் மற்றும் பெண்கள் நலனுக்காக மேம்படுத்த முடியுமா என்ற ஒரு கேள்வி வைத்தார்கள். அதுபற்றி துறை சார்பில் ஆய்வு செய்து பரிசீலிக்கப்படும். அதேபோல், எஸ்ஓஎஸ் வில்லேஜ்போல் வேறு இடங்களில் அமைக்க அரசு பரிசீலிக்கும்….

The post தாம்பரம் தொகுதியில் உள்ள 40 அங்கன்வாடி மையங்களுக்கு உபகரணங்கள் வழங்க வேண்டும்: பேரவையில் எஸ்.ஆர்.ராஜா எம்எல்ஏ வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Centers ,Tambaram Constituency ,SR Raja MLA ,Chennai ,Tambaram ,MLA ,S.R.Raja ,DMK ,
× RELATED வீடுகளில் வளர்க்கப்படும் செல்ல...