×

வயலில் அனுமதியின்றி செட்? பிருத்விராஜ் படப்பிடிப்புக்கு தடை

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே வயலில் அனுமதியின்றி செட் போடப்பட்டதால் பிருத்விராஜ் படத்தின் ஷூட்டிங்கை நடத்த நகரசபை தடை விதித்துள்ளது. பிரபல மலையாள நடிகர் பிருத்விராஜ் நாயகனாக நடிக்கும் ‘குருவாயூரம்பல நடையில்’ என்ற படத்தை விபின் தாஸ் என்பவர் இயக்கி வருகிறார். இந்த படத்திற்காக எர்ணாகுளம் மாவட்டம் பெரும்பாவூர் அருகே உள்ள காராட்டுபள்ளிக்கரை என்ற இடத்தில் உள்ள ஒரு வயலில் குருவாயூர் கோயில் போல செட் போடப்பட்டு வருகிறது.

கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக 60க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இந்த செட்டை அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் வயலில் அனுமதியின்றி சினிமா செட் போடப்பட்டு வருவதாக பெரும்பாவூர் நகரசபைக்கு புகார் வந்தது. இதையடுத்து நகரசபை அதிகாரிகள் அந்த இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டனர்.

அதை தொடர்ந்து வயலில் சினிமா செட் அமைப்பதற்கு முறையான அனுமதி வாங்கவில்லை என்று கூறி படப்பிடிப்பு நடத்த தடை விதிக்கப்பட்டது. ஆனால் செட் போடுவதற்கு ஏற்கனவே நகரசபையின் அனுமதிக்காக விண்ணப்பிக்கப்பட்டு உள்ளது என்றும், சில கவுன்சிலர்களின் தனிப்பட்ட லாபத்திற்காகவே நகரசபை இந்த நடவடிக்கை எடுத்து உள்ளது என்றும் அந்த இடத்திற்கான உரிமையாளர் ஜாய் கூறியுள்ளார்.

The post வயலில் அனுமதியின்றி செட்? பிருத்விராஜ் படப்பிடிப்புக்கு தடை appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Prithviraj ,Thiruvananthapuram ,Ernakulam ,Kerala ,Vipin Das ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED கேரளாவில் ஓடும் ரயிலில் குமரி மாடல் அழகியிடம் அத்துமீறிய வாலிபர் கைது