×

தமிழக மீனவர்களை தாக்கி வலைகள் பறித்த இலங்கை கடற்கொள்ளையர்

வேதாரண்யம்: நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த ஆறுகாட்டுத்துறை பனங்காட்டு தெருவை சேர்ந்த ஆறுமுகம், அவரது மகன் ஜீவன்ஸ் ஆகிய 2 பேர் பைபர் படகில் கடந்த 19ம் தேதி மீன் பிடிக்க சென்றனர். ஆறுகாட்டுத்துறை அருகே நள்ளிரவில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, ஒரு பைபர் படகில் வந்த இலங்கையை சேர்ந்த தமிழ் பேசிய 5 பேர்களில், 4 பேர் படகில் ஏறி, 2 மீனவர்களை தாக்கிஜிபிஎஸ், செல்போன்கள், லைட் உட்பட மீன்பிடி உபகரணங்களை பறித்து சென்றனர். இதேபோல் ஆறுகாட்டுத்துறை சங்கர்(48), குமார்(60), தேத்தாக்குடி கார்த்திகேயன்(65) ஆகிய 3 பேரும் நள்ளிரவு அதே பகுதியில் மீன் பிடித்துக்கொண்டிருந்தபோது, 2 பைபர் படகுகளில் வந்த இலங்கையை சேர்ந்த 3 மீனவர்களை தாக்கி பொருள்களை பறித்துக் கொண்டு விரட்டியடித்தனர். மேலும் ஆறுகாட்டுத்துறை ரமேஷ்(38), நல்லதம்பி(41), காளிதாஸ்(40), அருள்செல்வன்(42) ஆகிய 4 பேரும் நள்ளிரவு மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது பைபர் படகில் ஆயுதங்களுடன் வந்த இலங்கையை சேர்ந்த 5 பேர், படகில் ஏறி 4 மீனவர்களை கட்டையால் தாக்கி பேட்டரிகள், போன், 25 கிலோ வாளை மீன் வலையையும் பறித்து சென்றனர். இலங்கை கடற்கொள்ளையர்களால் கொள்ளையடித்து செல்லப்பட்ட மீன்பிடி உபகரணங்களின் மதிப்பு ரூ.2 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது….

The post தமிழக மீனவர்களை தாக்கி வலைகள் பறித்த இலங்கை கடற்கொள்ளையர் appeared first on Dinakaran.

Tags : Vedaranyam ,Arumugam ,Jeevans ,Panangattu Street ,Arukatuthura ,Vedaranyam, Nagai District ,
× RELATED மழையால் பாதிக்கப்பட்ட கோடைசாகுபடி...