×

சென்னை திருமுல்லைவாயலில் குறவர் இனமக்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு: நன்றி தெரிவித்த குறவர் இன மக்கள்

சென்னை: சென்னை திருமுல்லைவாயலில் குறவர் இனமக்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று  சந்தித்தார். குறவர் மக்களுடன் கலந்துரையாடும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுடன் தேநீர் அருந்துகிறார். குறவர் இன மக்கள் குடியிருப்பில் மரக்கன்றை நட்டு வைத்தார். குறவர் இன மக்களுக்கு குடும்ப அட்டைகள், முதியோர் உதவித் திட்டத் தொகை உதவிகளை வழங்கினார். ரூ.36 லட்சம் மதிப்பில் அடிப்படை வசதிகளை செய்து கொடுத்த முதலமைச்சருக்கு குறவர் இன மக்கள் நன்றி தெரிவித்தனர். கடந்த மாதம் ஆவடி பகுதியில் நரிக்குறவர் இனைத்தைச் சேர்ந்த மக்கள் தங்கள் பகுதியில் உள்ள அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றித் தருமாறு முதலமைச்சரிடம் கோரிக்கை வைத்திருந்தனர். அதனை தொடர்ந்து அவர்களிடம் வீடியோ கால் மூலம் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களது பகுதிக்கு நேரில் வருவதாக வாக்குறுதி அளித்திருந்தார். அதனை நிறைவேற்றும் வகையில் இன்று ஆவடி பகுதியில் உள்ள குறவர் இன மக்களை சந்தித்து அவர்களுடன் பேசினார். அந்த பகுதி மக்களின் கோரிக்கைக்கு ஏற்ப அங்கு அமைக்கப்பட்டுள்ள அடிப்படை தேவைகளான குடிநீர் வசதி, தெருவிளக்குகள், உயர்மின் கோபுரம், சாலை வசதி, கழிப்பிட வசதி ஆகியவை முதல்-அமைச்சர் ஆய்வு செய்தார்….

The post சென்னை திருமுல்லைவாயலில் குறவர் இனமக்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு: நன்றி தெரிவித்த குறவர் இன மக்கள் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Tirumullai Waal ,Karwar ,Stalin ,Nightingale ,Chief Minister ,Muhammadri Muhammadinejad ,Kravar ,Thirumullawail ,BC ,
× RELATED சென்னை கோயம்பேடு மேம்பாலத்தில் ஆண்...