×

நள்ளிரவில் சமந்தாவை டார்ச்சர் செய்த நபர்: அவரே வெளியிட்ட பதிவு

சென்னை: தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் திரைப்படங்கள் மற்றும் வெப்தொடர்களில் நடித்து பிரபலமான சமந்தா, தற்போது மயோசிடிஸ் என்ற தசை அழற்சி நோய் பாதிப்பு காரணமாக உடல்நிலை குன்றியுள்ளார். இதற்காக அமெரிக்கா சென்று, மருத்துவமனையில் தங்கி தீவிர சிகிச்சை பெறுகிறார். எனவே, புதுப்படம் மற்றும் வெப்தொடரில் நடிக்க ஒப்பந்தமாகாத அவர், ஏற்கனவே சில புதுப்படங்களில் நடிக்க வாங்கியிருந்த அட்வான்ஸ் தொகையை திருப்பிக் கொடுத்துவிட்டார்.

எப்போதுமே தனது உடலைக் கட்டுக்கோப்பாக வைத்து இருப்பதில் அதிக கவனம் செலுத்தி வருபவர், சமந்தா,.அடிக்கடி ஜிம்மில் ஒர்க்அவுட் செய்யும் போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்வார். இந்நிலையில், தற்போது தனது வாட்ஸ்அப் சாட்டிங் போட்டோ ஒன்றைப் பகிர்ந்துள்ள சமந்தா, ஜிம் பயிற்சியாளரிடம், தனக்கு உடல் வலி அதிகமாக இருப்பதாகவும், இன்று ஒருநாள் மட்டும் உடற்பயிற்சிகள் செய்வதில் இருந்து ‘பிரேக்’ எடுத்துக்கொள்வதாகவும் கேட்டுள்ளார்.

அதற்கு சமந்தாவின் ஜிம் பயிற்சியாளர், ‘நான் வந்துவிட்டேன். நீங்கள் இன்னும் இங்கு வரவில்லையே’ என்று கூறியுள்ளார். ஜிம் பயிற்சியாளர் தனக்கு லீவு கொடுக்காமல், கடுமையான உடற்பயிற்சிகள் செய்யச் சொல்லி தன்னை டார்ச்சர் செய்வதாக சமந்தா புகார் கூறியுள்ளார். இரவு 11 மணிக்கு நடந்த இந்த வாட்ஸ்அப் சாட்டிங் குறித்த ஸ்கிரீன் ஷாட் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

The post நள்ளிரவில் சமந்தாவை டார்ச்சர் செய்த நபர்: அவரே வெளியிட்ட பதிவு appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Samantha ,Chennai ,United States ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED தேர்வு நிறைவு பெற்றுவிட்ட நிலையில்...