அம்பத்தூர்: அம்பத்தூர் டெலிபோன் எக்சேஞ்ச் பகுதியை சேர்ந்த சுரேஷ், அதே பகுதியில் பேக்கரி நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு வியாபாரம் முடிந்ததும் கடையை மூடிவிட்டு சென்றார். நேற்று அதிகாலை 5 மணிக்கு இந்த பேக்கரியில் தீவிபத்து ஏற்பட்டு, கரும்புகை வெளியேறியது. இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் சுரேசுக்கு தகவல் தெரிவித்தனர். அவர் விரைந்து வந்து, தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் அம்பத்தூர், திருவொற்றியூரில் இந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து, சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். அதற்குள் அங்கிருந்த உணவு பொருட்கள், மெஷின்கள் எரிந்து நாசமானது. இதுகுறித்து அம்பத்தூர் தொழிற்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து, தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்….
The post பேக்கரியில் தீ விபத்து appeared first on Dinakaran.