×

வீட்டில் விளையாடிய போது குழந்தை தலையில் சிக்கிய பாத்திரம்: தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்

அம்பத்தூர்: அம்பத்தூர் அடுத்த பாடி பகுதியை சேர்ந்தவர் வினோத்ராஜ் (30), கூலித்தொழிலாளி. இவரது மனைவி அனிதா. இவர்களது ஒன்றரை வயது மகள் யஸ்விதா, நேற்று வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த போது, சமையல் செய்யும் பாத்திரத்தை எடுத்து தலையில் கவிழ்த்துள்ளது. அப்போது, எதிர்ப்பாராத விதமாக அந்த பாத்திரம் குழந்தை தலையில் சிக்கிக் கொண்டது. இதனால், பாத்திரத்தை வெளியே எடுக்க முடியாமல் குழந்தை அலறி துடித்தது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த பெற்றோர், அந்த பாத்திரத்தை வெளியில் எடுக்க முயன்றும் முடியவில்லை. இதுபற்றி அம்பத்தூர் தொழிற்பேட்டை தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில், வீரர்கள் விரைந்து வந்து, குழந்தையின் தலையில் சிக்கிய பாத்திரத்தை நீண்ட நேரம் போராடி அகற்றினர். …

The post வீட்டில் விளையாடிய போது குழந்தை தலையில் சிக்கிய பாத்திரம்: தீயணைப்பு வீரர்கள் மீட்டனர் appeared first on Dinakaran.

Tags : Ampathur ,Vinodraj ,Padi ,Anita ,
× RELATED சென்னையில் அனைத்து பேருந்து...