×

பிரபல நடிகர் மகளின் கணவர் சாவில் சந்தேகம் என பரபரப்பு புகார்: போலீசார் விசாரணை

சென்னை: மதுரை தல்லாகுளம் பகுதியை சேர்ந்தவர் பாலதண்டாயுதபாணி (58), இவரது மனைவி ராஜலட்சுமி (52). இவர், மறைந்த நடிகர் செந்தாமரையின் மகள் என்று கூறப்படுகிறது. கருத்து வேறுபாடு காரணமாக கடந்த  7ஆண்டுகளாக மனைவியை விட்டு பிரிந்து பாலதண்டாயுதபாணி மதுரையில் தனியாக வசித்து வந்தார். ராஜலட்சுமி, இரு மகன்களுடன் மதுரவாயல், எம்.ஜி.சக்கரபாணி நகர் பகுதியில் வசித்து வந்தார். இந்நிலையில் பாலதண்டாயுதபாணிக்கு உடல்நிலை சரியில்லாததால் ராஜலட்சுமி, கடந்த சில தினங்களுக்கு முன்பு மதுரைக்கு சென்று பாலதண்டாயுதபாணியை அழைத்து வந்து கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்தார். இதற்கிடையே, பாலதண்டாயுதபாணியை காணவில்லை என்றும் அவரை கண்டுபிடித்து தருமாறும் மதுரை தல்லாகுளம் போலீசில் அவரது சகோதரர் குமார் புகார் அளித்துள்ளார். மேலும் மதுரை நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவும் தாக்கல் செய்துள்ளார். கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த பாலதண்டாயுதபாணி நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தகவலறிந்த பாலதண்டாயுதபாணியின் சகோதரர் குமார் மற்றும் உறவினர்கள் அவரது சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி மதுரவாயல் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இதுகுறித்து மதுரவாயல் போலீசார் பாலதண்டாயுதபாணியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.  ராஜலட்சுமியிடம் போலீசார் விசாரணை நடத்தினர். பாலதண்டாயுதபாணிக்கு பல கோடி மதிப்புள்ள சொத்துகள் இருப்பதாகவும் அதற்காகத்தான் தற்போது அவரது மரணத்தை இரு தரப்பினரும் பிரச்னையாக்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது. தற்போது மர்மச் சாவு என்று வழக்குப் பதிவு செய்த போலீசார் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகு விசாரிக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்….

The post பிரபல நடிகர் மகளின் கணவர் சாவில் சந்தேகம் என பரபரப்பு புகார்: போலீசார் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Chavil ,PALATHANDAYUDHAPANI ,Rajalakummi ,Madurai Tallagulam ,Sendamarin ,
× RELATED திருக்கனூர் அருகே இளம்பெண் சாவில்...