×

ஏ.ஆர்.ரகுமான் மீது ஆணையரகத்தில் புகார்

சென்னை: ஏ.ஆர்.ரகுமான் மீது சென்னை காவல் ஆணையரிடம் அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கம் சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2018 ஆம் ஆண்டு அறுவை சிகிச்சை நிபுணர்களுக்கான மாநாட்டில் ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. அப்போது மாநாடு நடத்த சரியான இடம் மற்றும் அனுமதி கிடைக்காததால் ஏ.ஆர்.ரகுமான் நிகழ்ச்சி நடைபெறாமல் போனது. நிகழ்ச்சிக்காக ஏ.ஆர்.ரகுமானுக்கு வழங்கப்பட்ட ரூ.29.50 லட்சத்தை திரும்பப் கேட்டு கடிதம் அனுப்பப்பட்டது. ஆனால் முன்பணத்தை பெற்றுக்கொண்ட ஏ.ஆர்.ரகுமான் திருப்பி தரவில்லை என குற்றம் சாட்டப்படுகிறது.

ஏ.ஆர்.ரகுமான் மீது சென்னை காவல் ஆணையரிடம் அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கம் சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏ.ஆர்.ரகுமான் தரப்பில் தரப்பட்ட காசோலை, வங்கிக் கணக்கில் பணம் இல்லாமல் திரும்பி வந்ததாகவும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. கடந்த 2018ல் இசை நிகழ்ச்சி நடத்துவதாக ரூ.29.50 லட்சம் முன்பணம் பெற்று, திருப்பி தரவில்லை என குற்றம் சாட்டியுள்ளனர். மாநாடு நடத்த அனுமதி கிடைக்காததால் நிகழ்ச்சிக்கான முன் தொகையை திருப்பி கேட்டதாகவும், அதனை தரவில்லை எனவும் புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

The post ஏ.ஆர்.ரகுமான் மீது ஆணையரகத்தில் புகார் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : PA ,Commission on Rakuman ,Association ,Chennai Police Commission on ,Rakuman ,A.A. R.R. Rakuman ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED அரசமைப்பு சட்டத்தை மதிப்பதாக மோடி...