×

விஷம் குடித்த சிறை கைதி பலி

புழல்: கடலூர், அம்பேத்கர் நகர்,  பெரிய தெருவை சேர்ந்த சந்தோஷ் (28), சேத்தியாதோப்பு போலீசாரால்  பாலியல் வன்கொடுமை சட்டத்தில் கைது  செய்யப்பட்டு, சிதம்பரம் கிளை சிறையில் அடைக்கப்பட்டார். கடந்த  மாதம் நீதிமன்ற விசாரணைக்கு சென்று வந்தபின், இவருக்கு கடும் வயிற்றுவலி ஏற்பட்டது. விசாரணையில், அவர் எலி மருந்து சாப்பிட்டது தெரியவந்தது. அவரை கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கடந்த 23ம் தேதி புழல் சிறைக்கு அழைத்து வரப்பட்டு, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன் தினம் இரவு சந்தோஷ் இறந்தார்….

The post விஷம் குடித்த சிறை கைதி பலி appeared first on Dinakaran.

Tags : Santhosh ,Periya Street, Ambedkar Nagar, Cuddalore ,Chetiyathoppu Police ,Dinakaran ,
× RELATED விதை நேர்த்தி விழிப்புணர்வு