×

பழவேற்காடு அருகே ஆண்டார்மடத்தில் குழாய் உடைப்பு குடிநீர் சப்ளை துண்டிப்பு: கிராம மக்கள் சாலை மறியல்

பொன்னேரி: பழவேற்காடு அருகே ஆண்டார்மடம் கிராமத்திற்கு செல்லும் குழாய் இணைப்பில் உடைப்பு ஏற்பட்டதால், கடந்த 5 நாட்களாக குடிநீர் கிடைக்கவில்லை எனக் கூறி, கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு அருகே கடப்பாக்கம் ஊராட்சிக்குட்பட்டது ஆண்டார்மடம் கிராமம். இங்கு, கடந்த 5 நாட்களாக குடிநீர் வழங்கப்படவில்லை என கூறி அக்கிராம மக்கள் காலி குடங்களுடன் நேற்று காலை பழவேற்காடு பென்னேரி செல்லும்  சாலையில் மறியலில் ஈடுபட்டனர். கடந்த வடகிழக்கு பருவமழை காரணமாக ஆண்டார்மடம் பகுதி மழை வெள்ளத்தால் சாலை தனித்தீவாக துண்டிக்கப்பட்டது. இந்நிலையில், கடப்பாக்கம் ஊராட்சியில் இருந்து ஆண்டார்மடம் கிராமத்திற்கு கொண்டு வரப்பட்ட குடிநீர் குழாயும் உடைப்பு ஏற்பட்டது. இதனால், தண்ணீர் சப்ளையும் துண்டிக்கப்பட்டது. இது குறித்து, அதிகாரிகள் விசாரணை நடத்தி,  தற்காலிக தீர்வாக டிராக்டர் மூலம் தண்ணீர் சப்ளை செய்து வந்தனர். அதன் பின் குழாய் இணைப்பு சரி செய்யப்பட்டு குடிநீர் கிடைத்து வந்தது. இந்நிலையில், கடந்த 5 நாட்களுக்கு முன்பு மீண்டும் ஆண்டார்மடம் செல்லும் குடிநீர்  குழாயில் இணைப்பில் உடைப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக, மீண்டும் குடிநீர் சப்ளை துண்டிக்கப்பட்டது. இந்த பிரசனை, சரி செய்யப்படாத காரணத்தினால் அக்கிராமமக்கள் ஆண்டார்மடம் அருகே பழவேற்காடு பொன்னேரி நெடுஞ்சாலையில் நேற்று காலை ஒரு மணி நேரம்  சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில், திருப்பாலைவனம் காவல்துறையினர் மற்றும் ஊராட்சி மன்றத்தினர் அக்கிராம மக்களுடன் சமரச பேச்சு வார்த்தை நடைபெற்றது. இதில் சீர் ெசய்து தரப்படும் என்று உறுதியளித்ததின் பேரில் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். …

The post பழவேற்காடு அருகே ஆண்டார்மடத்தில் குழாய் உடைப்பு குடிநீர் சப்ளை துண்டிப்பு: கிராம மக்கள் சாலை மறியல் appeared first on Dinakaran.

Tags : Andorma ,Bonneri ,Andarmadam ,Paravadam ,Antiquity ,Dinakaran ,
× RELATED மீஞ்சூரில் வீட்டு வாசலில்...