×

ஆண் நண்பர்களுடன் சேர்ந்து தாயை கொன்ற 17 வயது சிறுமி: தூத்துக்குடியில் பரபரப்பு

தூத்துக்குடி: தூத்துக்குடி வண்ணார் 2வது தெருவை சேர்ந்தவர் மாடசாமி (41). ஆட்டோ டிரைவர். இவரது  மனைவி முனியலட்சுமி (39). இவர்களுக்கு ஒரு மகன், 3 மகள்கள். கருத்து வேறுபாட்டால் மாடசாமியும், முனியலட்சுமியும் பிரிந்தனர். மூத்த மகளான 17 வயது சிறுமி தூத்துக்குடி பாலிடெக்னிக்கில் முதலாமாண்டு படித்து வருகிறார். இவரும் முனியலட்சுமியும் ஒரே வீட்டில் வசித்தனர். மாடசாமி மற்ற 3 குழந்தைகளுடன் மாமியார் வீட்டில் வசித்துள்ளார். இந்நிலையில் நேற்று அதிகாலை தென்பாகம் காவல் நிலையத்தில் தாய் முனியலட்சுமியை யாரோ 4 பேர்கொலை செய்துவிட்டு தப்பிவிட்டதாக 17வயது மகள் கூறினார். போலீசார் விரைந்து சென்று விசாரித்தனர். மகள் முன்னுக்குபின் முரணாக பதிலளிக்கவே, சந்தேகத்தை அடுத்து அவரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அதன் விவரம்: கணவரை பிரிந்த முனியலட்சுமி, வேறு ஒரு நபருடன் சேர்ந்து வசித்துள்ளார். மகளுக்கு ஆண் நண்பர்கள் உண்டு என்பதால் பிற நபர்களுடன் பாலியல் தொழிலில் ஈடுபட வற்புறுத்தினார் என அந்த சிறுமி தனது ஆண் நண்பரான முத்தையாபுரத்தைச் சேர்ந்த கண்ணன் (22) என்பவரிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து அவர் நண்பர்களான கோடாங்கி என்கிற முத்து (26), தங்ககுமார் (28) ஆகியோருடன் வந்து 4 பேரும் சேர்ந்து முனியலட்சுமியை துணியால் கழுத்தை இறுக்கியும், கத்தியால் வெட்டியும் கொலை செய்துள்ளனர் என சிறுமி தெரிவித்துள்ளார். இதையடுத்து 17 வயதான சிறுமி மற்றும் கண்ணன் ஆகியோரை கைது செய்த போலீசார், தலைமறைவான தங்ககுமார், கோடாங்கி என்ற முத்து ஆகியோரைத் தேடி வருகின்றனர். …

The post ஆண் நண்பர்களுடன் சேர்ந்து தாயை கொன்ற 17 வயது சிறுமி: தூத்துக்குடியில் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Thuthukudi ,Madasami ,Thuthukudi Vannar 2nd Street ,Munyalakshmi ,Toothaloo ,
× RELATED தமிழ்நாட்டில் டெங்கு கட்டுக்குள் உள்ளது: அமைச்சர் பேட்டி