×

பெண்ணின் ஆபாச படம் வெளியிடுவதாக மிரட்டல் அமமுக நகர செயலாளர் கைது

பூந்தமல்லி: பூந்தமல்லி மசூதி தெருவை சேர்ந்தவர் ஜாகிர் அப்பாஸ் (36), அமமுக பூந்தமல்லி நகர செயலாளர். கடந்த மாதம் பூந்தமல்லி நகராட்சி தேர்தலில் அமமுக சார்பில் போட்டியிட்ட ஜாகிர் அப்பாஸ், 33 ஓட்டுக்கள் மட்டுமே பெற்று டெபாசிட் இழந்து படுதோல்வியடைந்தார். அதே பகுதியில் இறைச்சி கடை நடத்தி வரும் இவர்,  கொரோனா ஊரடங்கு அமலில் இருந்தபோது வீடு வீடாக சென்று இறைச்சி விற்பனை செய்து வந்தார். அப்போது, பூந்தமல்லி நகர் பகுதியை சேர்ந்த மில்டன் ராஜதுரை என்பவரின் மனைவி ஜா (40) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியுள்ளது. இதையறிந்த மில்டன் ராஜதுரை, மனைவியை கண்டித்துள்ளார். இதனால், அவர் ஜாகிர் அப்பாஸூடன் பேசுவதை தவிர்த்துள்ளார்.இந்நிலையில், நேற்று முன்தினம் பூந்தமல்லி தேசிய நெடுஞ்சாலையில் மில்டன் ராஜதுரை பைக்கில் சென்றபோது, அவரை வழிமறித்த ஜாகிர் அப்பாஸ், ‘‘உனது மனைவியுடன் நான் நெருக்கமாக இருக்கும் போட்டோக்கள் என்னிடம் உள்ளது. நான் கேட்கும் பணத்தை கொடுக்காவிட்டால் அதை சமூக வலைதளத்தில் வெளியிட்டு அசிங்கப்படுத்திவிடுவேன். எனக்கு அரசியல் செல்வாக்கு உள்ளது. என்னை யாரும் எதுவும் செய்ய முடியாது,’’ என்று கூறி மிரட்டியுள்ளார். இதனால், இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த ஜாகிர் அப்பாஸ் மில்டன் ராஜதுரையை சரமாரியாக கல்லால் தாக்கியுள்ளார். இதில்  தலையில் பலத்த காயமடைந்த அவர் பூந்தமல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின் பேரில், வழக்குப் பதிவு செய்த பூந்தமல்லி போலீசார் ஜாகிர் அப்பாஸை கைது செய்தனர். பின்னர் அவரை பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். இதற்கிடையே அமமுக நகர செயலாளர் பொறுப்பிலிருந்து ஜாகிர் அப்பாஸ் விடுவிக்கப்படுவதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.   …

The post பெண்ணின் ஆபாச படம் வெளியிடுவதாக மிரட்டல் அமமுக நகர செயலாளர் கைது appeared first on Dinakaran.

Tags : Amamukha ,Poontamalli ,Zakir Abbas ,Masjid Street ,Amamukha Poontamalli ,Poontamalli… ,Amamuka ,
× RELATED மதுரவாயலில் உயர்நீதிமன்ற உத்தரவின்படி ஆக்கிரமிப்புகள் அகற்றம்