×

நகைக்கடன் தள்ளுபடி

வாலாஜாபாத்: வாலாஜாபாத் ஒன்றியம் தேவரியம்பாக்கம் ஊராட்சியில் உள்ள,  கூட்டுறவு வங்கியில் நகைக்கடன் தள்ளுபடிக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. கூட்டுறவு வங்கி துணை தலைவர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற தலைவர் அஜய்குமார் முன்னிலை வகித்தார். க.சுந்தர் எம்.எல்.ஏ கலந்துகொண்டு 149 பேருக்கு ₹48 லட்சம் மதிப்பிலான நகைக்கடன் தள்ளுபடி செய்ததற்கான சான்றிதழை வழங்கினார். அப்போது அவர் பேசுகையில், திமுக  தேர்தல் பிரசாரத்தின் போது கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் அனைத்தும் தொடர்ந்து நிறைவேற்றப்படுகிறது.  அதன் அடிப்படையில் இந்த நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. அனைத்து தேர்தல் வாக்குறுதிகளும் விரைவில் நிறைவேற்ற தமிழக முதல்வர் நடவடிகை மேற்கொண்டு வருகிறார் என்றார். நிகழ்ச்சியில், ஒன்றியக்குழு தலைவர் தேவேந்திரன், ஒன்றிய கவுன்சிலர்கள் அமலிசுதா, சஞ்சய்காந்தி, உலகநாதன், தொள்ளழி ஊராட்சி மன்ற தலைவர் அசினா அயூப்கான், வாலாஜாபாத் பேரூர் செயலாளர் பாண்டியன், பேரூராட்சி துணை தலைவர் சுரேஷ்குமார், கூட்டுறவு வங்கி செயலர் புஷ்பலதா, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் பெருமாள்,  வினோபாஜி, நரசிம்மன் உள்பட பலர் கலந்து கொண்டனர்….

The post நகைக்கடன் தள்ளுபடி appeared first on Dinakaran.

Tags : Walajahabad ,Devariyambakkam Panchayat ,Union.… ,Dinakaran ,
× RELATED புதர்மண்டிய தொள்ளாழி பள்ளி கூடம்,...