×

அப்பாவை அவதூறாக பேசியவர்களுக்கு கதீஜா ரகுமான் பதிலடி

சென்னை: ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சி குளறுபடியில் மலிவான அரசியல் செய்வதாக அவரது மகள் கதீஜா வேதனை தெரிவித்துள்ளார். ஏ.ஆர். ரஹ்மான் பங்கேற்ற இசை நிகழ்ச்சி பனையூரில் கடந்த 10ம் தேதி நடைபெற்றது. ஏசிடிசி ஈவென்ட்ஸ் என்ற தனியார் நிறுவனம் ஒன்று இந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது. இந்த நிகழ்ச்சிக்கு மொத்தமாகவே 35 ஆயிரம் டிக்கெட்டுகள் தான் ஒதுக்கப்பட்டுள்ளதாம். ஆனால், அதைவிட கூடுதலாக டிக்கெட்டுகள் விற்கப்பட்டுள்ளன. தரவரிசைப்படி கோல்ட் டிக்கெட் ரூ.2000, பிளாட்டினம் மற்றும் டைமண்ட் போன்ற டிக்கெட்களின் விலை ரூ.5000 மற்றும் ரூ.10000 என நிர்ணயித்துள்ளனர். மேலும் அதற்கு மேல் வைத்தும் அதாவது ரூ.30 ஆயிரம் வரை டிக்கெட்டுகள் விற்பனை ஆகியுள்ளது.

ஆனால், யார் யார் எந்தெந்த டிக்கெட் வாங்கியுள்ளார்கள் என்று கவனிக்காமல் 35 ஆயிரம் பேர்களை மட்டும் நிகழ்ச்சி நடக்கும் அரங்கத்துக்கு உள்ளே அனுமதித்துள்ளனர். மற்றவர்களுக்கு உள்ளே அனுமதி கிடைக்கவில்லை. இதனால் பணம் கொடுத்து டிக்கெட் வாங்கிய அனைவரும் கடும் கோபமடைந்தனர். இதில் விழாவில் இருந்த பாதுகாவலர்களுடன் நிகழ்ச்சிக்கு வந்தவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு ஏற்பட்ட தள்ளுமுள்ளு, கூட்ட நெரிசலில் ரசிகர்கள் சிலர் மயங்கியும் விழுந்துள்ளனர். பெண்கள் பலர் கதறி அழுதனர். அந்த பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. இப்படியொரு பித்தலாட்டமா என பலரும் சமூக வலைத்தளத்தில் கூறி வருகிறார்கள். மேலும் இதன்மூலம் ரசிகர்கள் தங்களது பணத்தையும் இழந்துள்ளனர்.

இந்நிலையில் இந்த விவகாரத்தில் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கும்படி தாம்பரம் போலீஸ் கமிஷனருக்கு டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து ஏ.ஆர். ரஹ்மான் இன்ஸ்டாகிராமில் கூறும்போது, ‘பணம் செலுத்தி நிகழ்ச்சி பார்க்க முடியாத ரசிகர்கள், மெயில் மூலம் தொடர்புகொண்டால் நடவடிக்கை எடுக்கப்படும். மக்கள் விழித்துக்கொள்ள நானே பலிஆடு ஆகிறேன். இதுபோன்ற நிகழ்வில் பெண்கள், குழந்தைகள் பாதுகாப்புக்கு வசதிகள் செய்ய வேண்டும்’ என்று ெதரிவித்துள்ளார். இதற்கிடையில் இந்த நிகழ்ச்சி மூலம் ஏ.ஆர்.ரகுமான் ஊழல் செய்ததாக பலர் விமர்சித்து வந்த நிலையில் இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக அவரது மகள் கதீஜா ரகுமான் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.

அதில், “இசை நிகழ்ச்சி மூலம் ஏ.ஆர்.ரகுமான் ஊழல் செய்ததை போல சமூக வலைதளங்களில் பேசி வருகின்றனர். சிலர் இந்த விவகாரத்தில் மலிவான அரசியல் செய்து வருகின்றனர். நிகழ்ச்சியில் ஏற்பட்ட குளறுபடிகள் அனைத்திற்கும் நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர்கள் தான் 100 சதவீதம் காரணம். எனினும் ஏ.ஆர்.ரகுமான் அதற்கு பொறுப்பெற்று கொள்வதாக அறிவித்திருந்தார். ஏ.ஆர்.ரகுமான், வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் நோக்கில் 2016 -ஆம் ஆண்டு சென்னை, மதுரை, கோவை மாவட்டங்களில் ‘நெஞ்சே எழு’ என்ற இசை நிகழ்ச்சி நடத்தியவர், கேரள மக்கள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட போது 2018- ஆம் ஆண்டு வெளிநாடுகளில் இசை நிகழ்ச்சி நடத்தி அதன் மூலம் உதவினார்.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட பல குடும்பங்களுக்கு பல உதவிகளை செய்தார். திரைத்துறையில் ஏழ்மை நிலையில் உள்ள லைட் மேன்களுக்கு உதவும் நோக்கில் இலவசமாக இசை நிகழ்ச்சி நடத்தினார். அவர் குறித்து பேசும் முன் இதனையெல்லாம் யோசித்து பேசுங்கள்” என குறிப்பிட்டுள்ளார்.

The post அப்பாவை அவதூறாக பேசியவர்களுக்கு கதீஜா ரகுமான் பதிலடி appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Kadeja Rakuman ,A. R.R. ,kadija ,rakuman ,PA R.R. ,Rahman ,Paniyur ,ACDC Events ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சியை ஏற்பாடு...