×

உங்களில் பாதியாக இருப்பேன்: மம்மூட்டியிடம் துல்கர் உருக்கம்

சென்னை: ‘நிச்சயம் ஒருநாள் உங்களில் பாதியாக இருப்பேன் அப்பா’ என நடிகர் மம்மூட்டியின் பிறந்த நாளுக்கு அவரது மகனும் நடிகருமான துல்கர் சல்மான் உருக்கமாக வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ‘நான் சிறுவனாக இருந்தபோது உங்களைப்போல ஆக வேண்டும் என ஆசைப்பட்டேன். நான் முதன்முறையாக கேமரா முன்னால் நின்றபோது உங்களைப்போன்ற நடிகனாக வேண்டும் என விரும்பினேன்.

தந்தையானபோது நான் ஆக விரும்பிய அனைத்தும் நீங்களாக இருந்தீர்கள். என்றாவது ஒரு நாள் உங்களில் பாதியாக இருப்பேன் என்று நான் நம்புகிறேன். பிறந்தநாள் வாழ்த்துகள் அப்பா’ என உருக்கமாக பதிவிட்டுள்ளார். மம்மூட்டியின் நடிப்பில், ‘காதல் தி கோர்’, ‘கண்ணூர் ஸ்குவாட்’, ‘பிரமயுகம்’ உள்ளிட்ட படங்கள் திரைக்கு வர உள்ளன. 72 வயதிலும் அவர் பிசி நடிகராக உள்ளார்.

The post உங்களில் பாதியாக இருப்பேன்: மம்மூட்டியிடம் துல்கர் உருக்கம் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Dulquer ,Mammootty ,CHENNAI ,Dulquer Salmaan ,Dulkar ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED மம்மூட்டிக்கு வித்யா பாராட்டு