×

தமிழகம் முழுவதும் 91 இன்ஸ்பெக்டர்கள் டிஎஸ்பிக்களாக பதவி உயர்வு: உள்துறை செயலாளர் பிரபாகர் உத்தரவு

சென்னை: தமிழகம் முழுவதும் காவல் துறையில் பல்வேறு பிரிவுகளில் பணியாற்றி வரும் 91 இன்ஸ்பெக்டர்களுக்கு பணி மூப்பு அடிப்படையில் டிஎஸ்பியாக பதவி உயர்வு வழங்கி உள்துறை செயலாளர் பிரபாகர் உத்தரவிட்டுள்ளார். தமிழக காவல் துறையில் சட்டம் ஒழுங்கு, குற்றப்பிரிவு மற்றும் தாலுகா காவல் நிலையங்கள் உட்பட பல்வேறு பிரிவுகளில் இன்ஸ்பெக்டர்களாக பணியாற்றி வரும் 91 பேருக்கு, பணி மூப்பு அடிப்படையில் 2021-2022 ஆண்டில் டிஎஸ்பியாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. அதற்கான பரிந்துரைப்பட்டியலை உள்துறை செயலாளர் பிரபாகர் வெளியிட்டுள்ளார். இந்த பட்டியலை தொடர்ந்து 91 இன்ஸ்பெக்டர்களும் பதவி உயர்வு வழங்கப்பட்டு டிஎஸ்பிக்களாகவும், உதவி கமிஷனர்களாகவும் தமிழகம் முழுவதும் பணியமர்த்தப்பட உள்ளனர். அதற்கான பணிகள் தற்போது நடந்து வருகிறது….

The post தமிழகம் முழுவதும் 91 இன்ஸ்பெக்டர்கள் டிஎஸ்பிக்களாக பதவி உயர்வு: உள்துறை செயலாளர் பிரபாகர் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Home Secretary ,Prabhagar ,Chennai ,Interior Secretary ,
× RELATED தமிழ்நாடு தலைமை செயலக சங்க கோரிக்கை...