சென்னை: தமிழகத்தில் உயிரிழப்புகள் ஏதும் இல்லாத நிலையில் நேற்று 77 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் இது குறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை நேற்று வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் நேற்று 77 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. வீட்டுத் தனிமை மற்றும் மருத்துவமனையில் 962 பேர் கொரோனா சிகிச்சை பெற்று வருகின்றனர். 169 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டு குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 34,13,087ஆக உயர்ந்துள்ளது. மேலும் நேற்று உயிரிழப்பு ஏதும் இல்லை….
The post தமிழகத்தில் 77 பேருக்கு கொரோனா appeared first on Dinakaran.